காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ஜெயராம் சார்பில் வக்கீல் ஆதித்யசவுத்திரி ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் (சிறுவன் கடத்தல்) ஏ.டி.ஜி.பி.யாக உள்ள மனுதாரருக்கு தொடர்பு […]
‘தக் லைப்’ வெளியாகும் தியேட்டர்கள் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது: கன்னட அமைப்புகளுக்கு போலீஸ்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர்த்து உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் (மே) 24-ந் தேதி சென்னையில் நடந்திருந்தது. அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து தமிழிலில் இருந்து தான் உங்களது மொழி (கன்னட மொழி) பிறந்தது என்று கூறினார். தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு […]
கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவராக ஏபிகே பழனி செல்வம் இருந்தார். இவரது தலைமையிலான நிர்வாக குழுவினர் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக ஏபிகே பழனி செல்வம் இன்று மாலை காலமானார். அவரது உடல் 1 வது செக்கடி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நாளை வியாழக்கிழமை வைக்கப்படுகிறது. ஏபிகே பழனி செல்வம் மறைவு செய்தி அறிந்ததும் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரமுகர்கள், […]
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது .பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது.. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மாதத்திற்கு […]
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.;நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், […]
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாநில அளவிலான ரத்ததான நிகழ்வை தமிழ்நாடு அரசு நடத்தியது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புதிய ரெட் ரிப்பன் கிளப்பின் நல்வாய்ப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் அதிகாரி கரங்களால் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய ரெட் ரிப்பன் கிளப்பிற்கு உண்டான அறிவிப்பாணை வழங்கப்பட்டது. ரெட் ரிப்பன் கிளப் (Red Ribbon […]
மந்தித்தோப்பு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு கோஷமிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன்,தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், தாலுகா குழு உறுப்பினர் மணிகண்டன், நகரப் பொருளாளர் சீனிவாசன் […]
தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது; திருமாவளவன் சந்திப்பு பற்றி வைகை செல்வன் பேட்டி
திருச்சியில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, தான் எழுதிய “பேசு பேசு நல்லா பேசு” என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் வைகைச்செல்வன் வழங்கினார். அதன் பிறகு, இருவரும் சுமார் அரை மணி நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்தக் கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டுவருவதாக கூறப்படுகிறது. […]
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (36 வயது) என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக செந்தில்பிரபு குறும்பப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கான செலவு ரூ.50 ஆயிரத்தை தாண்டுவதால், அதற்கு செயற்பொறியாளரின் அனுமதி பெற வேண்டியதாக இருந்தது. எனவே அவர் சோமனூர் […]







