மதர் சமூக சேவை நிறுவனம் ஆண்டு தோறும் பூமி பாதுகாப்பு தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி(இன்று ) பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.காயல்பட்டிணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ப. கைலாச […]
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட உங்கள் மகனுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ஜெயக்குமாரிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது :- ஜெயவர்த்தனுக்கு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அறிவு உள்ளது எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் துணிச்சலும் உள்ளது என் பையனை அருகில் வைத்துக் கொண்டே அவரைப் பற்றி நான் பெருமை பேச முடியாது… ஜெயவர்த்தன் தனித்தன்மையோடு தேர்தலை எதிர் கொள்வார் எனவே அவருடன் […]
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தென்னைகள் திரை உலகினர் மிகுந்த ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். நடிகர் அஜித்குமார் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து விட்டார்.ஓட்டு பதிவு தொடங்கும் வரை காத்திருந்து முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன், கவுதம் கார்த்திக், விஷால்,சரத்குமார், ஆரி,சிவக்குமார், கார்த்திக், சந்தானம், மனோஜ்,நாசர்,சிபி, இயக்குனர்கள் பாரதி […]
சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி , அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார். அப்போது கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழிகூறியதாவது :- இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், […]
மக்களவைத் தேர்தலில் ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆதரித்து பிரசாரம் செய்தார். வேட்பாளருடன் தொடர்ந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கபடி கேட்டுக் கொண்டார்
இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை திருநெல்வேலி வந்தடைந்தார். பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது […]
கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கோவை பா.ஜ.க. வேட்பாளரும் தமிழக பா.ஜ.க. தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார். அதில் கோவை தொகுதியில் 500 நாட்களில 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 வாக்குறுதிகளில் சிலவற்றை இங்கு காணலாம் * கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். * ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் * கோவையில் என்.ஐ.ஏ கிளை. […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள். மகப்பேற்றுக்குபின் கவனிப்பு கணினி பொருள்கள் ஏற்றுமதி இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவு படுத்துகின்றன,உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் அணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தலும் இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அகில இந்திய தலைவர்கள் வருகை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல்காந்தி நாளை (வெள்ளிகிழமை) […]
தமிழநாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.. முதல் நாள் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். தியாகராயநகர் பனகல் பூங்கா அருகில் இருந்து தேனாம்பேட்டை சந்திப்பு வரை திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். அந்த வாகனத்தில் சென்னை தொகுதிகளின் வேட்பாளர்கள மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இருந்தனர், ரோடு ஷோ தொடக்கம் முதல் இறுதி வரை சாலைகளின் இருபுறமும் மக்கள் கூடி இருந்து வரவேற்பு கொடுத்தனர், இந்த […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022