• April 27, 2024

Month: October 2022

செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பு: தமிழக மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்- டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தி.மு.க. அரசு வரும்போதெல்லாம், இரண்டு விஷயம் தலை தூக்கும். தீவரவாதம், வெடிகுண்டு கலாச்சாரம் தான் . இது தி.மு.க. ஆட்சியில் எப்போதும் நடக்கின்ற விஷயம். 89, 91 ம் ஆண்டு , தி.மு.க. ஆட்சி இரண்டாண்டு காலம் தான் இருந்தது. அந்த ஆட்சி எதனால் கலைக்கப்பட்டது. தீவிரவாத்த்தை ஊக்கப்படுத்தியதால் கலைக்கப்பட்டது. அதைப்போன்று இந்த முறையும் வன்முறை , பிரச்சினைகள் உருவாவது தி.மு.க. ஆட்சியில் சர்வசாதாரணம். […]

தூத்துக்குடி

நாளை 1-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்ட விவாதங்களில் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் ஆண்டு தோறும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்றும் அன்றை தினம் தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து 1.11.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ள இக் கிராம சபைக் கூட்டத்தின் போது அனைத்துத்துறை தொடர்பான கண்காட்சிகள், கொரோனா பெருந்தொற்று […]

செய்திகள்

நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீஸ் அனுமதி

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக […]

செய்திகள்

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக செலுத்தும் அதிகபட்ச கட்டணத்தை ரூ. 2 ஆயிரமாக குறைக்க

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும், இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமின்றி நேரடியாக மின் துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் […]

செய்திகள்

சீன கடன் செயலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு

இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. கொடுக்கும் கடன் தொகைக்கு கொடுமையாக வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்திருப்பதுடன், பல கோடி ரூபாய் சீனா சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சீன கடன் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில் சீன கடன் செயலி […]

செய்திகள்

பத்திரிகையாளர்கள் 41 பேருக்கு ஓய்வூதிய ஆணை; முதல்-அமைச்சர் வழங்கினார்

பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் […]

செய்திகள்

மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள்- அமைச்சர் நேரு

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு நேரடி ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறியதாவது:-வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள். பிளவு பட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது.அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அண்ணன்- தம்பி மாதிரி. பா.ஜ.க.வினர் சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிதாக்கி காட்டுகின்றனர். அதனால் தான் அ.தி.மு.க.வை சேரவிடாமல் […]

கோவில்பட்டி

கோழிக்கூண்டுக்குள் புகுந்த பாம்பு; தீயணைப்பு படையினர் பிடித்து காட்டில் விட்டனர்

கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவில் குடியிருப்பவர் ராமமூர்த்தி (வயது 42). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி முருக வேணி 2 குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இவர்கள் வீட்டு முன்பு கோழி கூண்டு வைத்து, கோழி வளர்த்து வருகிறார்கள்.கூண்டுக்குள் இருந்து காலை நேரத்தில் கோழிகளை திறந்து மேயவிட்ட முருகவேணி, மாலை நேரத்தில் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து பூட்டினார். சிறிது நேரத்தில் கூண்டுக்குள் அடைத்த கோழிகள் கத்தின. உடனே முருக […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொலை; பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மர்மம்

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 41) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரணிசெல்வி (39). இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு மனோஜ் (18) என்ற மகனும், உமா (14) என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறினர். வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த […]

கோவில்பட்டி

மைசூரு- தூத்துக்குடி இடையே சிறப்புகட்டண ரெயில்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மைசூரு- தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு கட்டண ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி மைசூர் – தூத்துக்குடி சிறப்பு கட்டண ரெயில் வருகிற 4, 11 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும்.மறுமார்க்கத்தில் தூத்துக்குடி – மைசூர் சிறப்பு கட்டண ரெயில் (06254) நவம்பர் 5, 12, 19 ஆகிய […]