• June 3, 2025

Month: June 2025

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (2.6.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 36 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு […]

கோவில்பட்டி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட துணைத் தலைவர் சாமியா, ஓட்டப்பிடாரம் வட்டாரத் தலைவர் தொப்பத்துரை மற்றும் […]

சினிமா

மத யானைக் கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். ‘ஆடுகளம்’ படத்தில்  வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். அதனை தொடர்ந்து, ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து ‘ராவணக்கோட்டம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில், நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு […]

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் வரலட்சுமி  வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி அறிவிப்பு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே. இராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி வருகிற 4 ந் தேதி முதல் 8 ந்தேதி வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது. கே ஆர் கலைக்கல்லூரி மைதானம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளனமொத்தம் 33 அணிகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில்  வாலிபர்,பெண் அடுத்தடுத்து வெட்டிக்கொலை; ஒரே கும்பல் கைவரிசையா?

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு வள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பிரகதீசை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பிரகதீஸ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை ஓட விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள மற்றவர்களால் வெட்டப்பட்டார்.  இந்த காட்சியை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். இருந்தாலும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ. 2 லட்சம்

கோவில்பட்டி செயற்கை  புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது  அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டி நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. இரவு 7 மணிக்கு கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை முன்னாள் இந்திய ஆக்கி வீரரும்,  அர்ஜுனா விருது பெற்றவருமான என். முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார் பரபரப்புடன் தொடங்கிய […]

செய்திகள்

டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது; திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை உத்தங்குடியில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்று மாலை நடந்த 3 மற்றும் 4

கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து அணிகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் […]