• April 27, 2024

Month: June 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து; உடல் கருகி பெண் பலி

கோவில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி மெயின்ரோட்டில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்று மதியம் ஆலையின் பின்புறத்தில் உள்ள குச்சி அரவை இயந்திரம் அறைக்கு முன்புறம்  தொழிலாளர்கள் சிலர் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது குச்சி இயந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. இந்த தீயில் சிக்கி மாரியம்மாள் என்ற பெண்  உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கனகலட்சுமி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா; நாளை நடக்கிறது

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது. வருடாபிஷேக விழா 1-ந் தேதி  காலை 6 மணிக்கு  தொடங்கி சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடக்கிறது. பின்னர் 8 மணிக்கு மேல் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் […]

தூத்துக்குடி

தொழில் முனைவோர் ஆக  மாறுவதற்கு பெண்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்- மாவட்ட

இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி கிளை  சார்பில் பெண் தொழில் முனைவோர் 2-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இன்றைய  வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது. புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி தலைவர் வெயிலா கே. ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜோஷி பெர்னான்டோ முன்னிலை வகித்தார். மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  சுவர்ணலதா சிறப்பு […]

செய்திகள்

ஒரு கைதி எப்படி அமைச்சராக  தொடர முடியும்? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர்  நீக்கியுள்ளாரே பதில் :_  ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது என்ன தெரிவித்தார்.தற்போது அவை அனைத்தும் சமூக ஊடகத்தில் வெளிவந்துகொண்டுள்ளது. செந்தில்பாலாஜியின் தம்பி தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். செந்தில்பாலாஜி ஊழலில் திளைத்துவருகிறார். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார். தற்போது உச்சநீதிமன்றம் […]

செய்திகள்

வக்கீல் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் அசோக்குமார்(வயது 29) வக்கீலான  இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கும் இவரது உறவினரான ராணுவ வீரர் குழந்தை பாண்டி மகன் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே இட தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அசோக் குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் (57) என்பவர் பேசிவந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு  அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த துரைராஜை ராணுவ வீரர் சுரேஷ் சரமாரியாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 18-ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்டம் முழுவதும்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட படுக்கப்பத்து உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 11-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி உதவி பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கிறது.  18-ந் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 25-ந் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட […]

செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 3 புதிய கிளைகள் திறப்பு

தலைசிறந்த கமர்சியல் செடியூல் வாங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி  தனது புதிய  கிளைகளை கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு மற்றும் தர்மபுரி மாவட்டம் பெரியனஹள்ளி ஆகிய ௩ இடங்களில் ஏ.டி.எம். சி.ஆர்.எம். வசதியுடன் திறந்தது.  இதில் 534 வது கிளையான கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி கிளையை எஸ்ஆர் டி ட்ரான்ஸ்போர்ட் குரூப் நஞ்சப்பன் திறந்து வைத்தார். 535 வது கிளையான கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு கிளையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

செய்திகள்

செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தற்போது அவரது காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். அமைச்சர் […]

செய்திகள்

செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறி இருப்பதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிவித்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடு எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மரபைத் தகர்த்து, அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் […]

செய்திகள்

செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் உத்தரவு நிறுத்தி வைப்பு ; ஸ்டாலினுக்கு கவர்னர்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய […]