• May 8, 2024

கோவில்பட்டியில் 18-ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்டம் முழுவதும் தேதி விவரம்

 கோவில்பட்டியில் 18-ந் தேதி  மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்டம் முழுவதும் தேதி விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட படுக்கப்பத்து உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 11-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி உதவி பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கிறது.

 18-ந் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 25-ந் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட சூரங்குடி உதவி பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட  தகவலை தூத்துக்குடி மேற்பார்வை என்ஜினீயர் குருவம்மாள் தெரிவித்து உள்ளார்.
 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *