முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளான நேற்று (ஜுன் – 3) பிறந்த கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு கோவில்பட்டி நகர திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பெ.கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து , தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம், […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே.ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி இன்று (ஜூன் 4) தொடங்கி 8 -ந்தேதி வரை நடக்கிறது. கோவில்பட்டி கே ஆர் கலைக் கல்லூரி ஆக்கி மைதானத்தில இன்று காலை நடந்த தொடக்க விழாவுக்கு கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.முதல் போட்டியை கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர்கள் தொடக்கி வைத்தனர் […]
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி தொகுதிக்கு மாநில பொதுக்குழுஉறுப்பினர் காளிதாஸ், விளாத்திகுளம் தொகுதிக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி ஆகிய இருவரையும் மாவட்டசெயலாளர் சுரேஷ் மற்றும் மண்டல பொறுப்பாளர் எஸ்.எஸ் எஸ் சந்திரன் பரிந்துரையில் அறிவித்துள்ளார். இவர்களுக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு கழக செயலாளர்கள் நிர்வாகிகள் முழுஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொண்டுள்ளார்
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் ஐகோர்ட்டு உத்தரவை மீறி கட்டணம் வசூல்; லாரி
மதுரை – தூத்துக்குடி . தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது, கிராம சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதிகளில் மின் விளக்குகள் அமைப்பது, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் முறையான பராமரிப்பு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத் தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்த விவரம் தகவல் […]
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட `ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாக விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ஒரு […]
மாணவ, மாணவியரின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆண்டு தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருது, பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்து வருகிறார். அந்த வகையில், த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் ஏஏஒய்ஃபிஹெச்ஹெச் குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 9,27,955 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 7,94,044 பேர் மட்டுமே கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதம் 1,33,547 பேர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெற தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்வது அவசியம். வெளி மாவட்டங்களில் தங்கி புரிந்துவருவோர், பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவர், மாணவிகள் தாங்கள் […]
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்..கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (3/6/2025) மத்திய அரசு […]
கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான தாட்கோ உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளர் ஜெனிசிஸ் சியா, தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர் விஜயசங்கர், நகர்நல ஆ. அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் இளங்கோ மற்றும் துப்புரவு ஆய்வாளர் இரா.ஆரியங்காவு ஆகியோர் முன்னிலை வகித்தனார் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி யின் போது 321 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலத்திட்ட உறுப்பினர் […]
கோவில்பட்டி நகர திமுக சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நடந்தது. பேருந்து நிலையம் அருகே நடந்த விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி, கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி – சேலை, இனிப்பு மற்றும் உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,நகர அவைத் […]