• April 18, 2024
கோவில்பட்டி

அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி 

கோவில்பட்டியில் ஜே. சி. ஐ.அமைப்பு மற்றும் ஆஸ்கார் கேட்டரிங்  கல்லூரி இணைந்து 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். பேரணியில் கேட்டரிங் மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கையா தொடங்கி வைத்தார்.ஜே. சி. ஐ. தலைவர் வெங்கடேஷ் தலைமையில் பேரணி நடந்தது. ‘அனைவரும் வாக்களிப்போம்’ என்ற கோஷத்துடன் நடந்து சென்றனர்.

தூத்துக்குடி

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த பாலகுமாரேசன்(வயது 46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. […]

தூத்துக்குடி

பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது;  கனிமொழி  பேச்சு

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று (17/4/2024) ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஏரல் காந்தி சிலை அருகில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது:-  19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மறக்காமல் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓட்டு போடாமல் இருந்தால் அவர்களையும் […]

தூத்துக்குடி

தேர்தல்  கட்டுப்பாடுகளை மீறினால் 2 ஆண்டு ஜெயில் ;  ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை 

தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.4.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய 48 மணி நேரமான 17.4.2024 புதன்கிழமை  மாலை 6 மணிமுதல் 19.4.2024 வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடியும்வரை  வேட்பாளர்கள் / அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம்/ ஊர்வலம் / பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சினிமா / தொலைக்காட்சி அல்லது வேறு மின்னணு […]

கோவில்பட்டி

கள்ள நோட்டு வழக்கு : கோவில்பட்டி போலீசாரால் கைதானவர் சிறையில் சாவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வந்த ஜெயக்குமார் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.  அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை […]

செய்திகள்

வட சென்னையில் மு. க. ஸ்டாலின் பிரசாரம்

 மக்களவைத் தேர்தலில் ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.  இன்று வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆதரித்து பிரசாரம் செய்தார்.  வேட்பாளருடன் தொடர்ந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.  பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கபடி கேட்டுக் கொண்டார்

கோவில்பட்டி

கோவில்பட்டி தெப்ப திருவிழா அவசர ஏற்பாட்டில்  நடந்தது 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா  கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில்  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உறவின் முறை சங்கத்தில் ஒரு பிரிவினர் பிரச்சினை ஏற்படுத்துவதாக கூறி இந்த ஆண்டு தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும்,  மண்டகபபடிதாரர் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறும் என்று கோவில் செயல் அலுவலருக்கு  நாடார் உறவின் முறை சங்க தலைவர் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன்   நேற்றுமதியம் […]

கோவில்பட்டி

செண்பகவல்லி அம்மன் கோவில் சார்பில் தெப்பதிருவிழா நடத்த அவசர ஏற்பாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றான தெப்பத் திருவிழா இன்று மாலை கோவில்பட்டி நாடார் உறவுமுறை சங்கம் சார்பில்  நடைபெறுவதாக இருந்தது,. இந்த நிலையில் சிலரின் இடையூறு காரணமாக  தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றபடி மண்டகபபடிதாரர் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கபட்டு உள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி  நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம், […]

தூத்துக்குடி

தேர்தல் நாளன்று பொதுவிடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற .19 ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வருகின்ற 19.4.2024 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். 1951ம் ஆண்டு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் காவல் துறையினர் தபால் வாக்களிக்க  சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியினை சேர்ந்த பிற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினர் மற்றும் அத்tதியாவசிய பணியாளர்கள் தபால் முறையில் வாக்களிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள முத்து அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த  மையத்தில் வாக்களிப்பதை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (15.04.2024) வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.