டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணி சென்ற மாணவர்கள் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து இன்றும் (21.07.2026) இளைஞர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதனிடையே மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் […]
தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முடிவைத்தானேந்தல் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் அதிக ஒலி எழுப்பும் 6 […]
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:-… பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. “பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ, அறிவிப்பையோ பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது. அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், […]
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு சிக்கல்: பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பீடு
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார். பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும், செலவு ரூ.9,319 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நிதி பற்றாக்குறை ரூ.1,602 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதுபோக, ஏற்கனவே உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவைகளில் வாங்கிய ரூ.2 ஆயிரம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு ரூ.95 கோடியே […]
மதுரை விராட்டிபத்தில் செயல்பட்டு வரும் அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் மற்றும் 25வது பொதுக்குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, காக்கிவாடன்பட்டி கிராமத்தில் நடந்தது. கருத்தரங்கம், புதிய உத்திகள் மற்றும் மூலிகைச் செடிகள் குறித்த விளக்க கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி முதலில் நடந்தது.தலைவர் வெங்கடசாமி அனைவரையும் வரவேற்றார். சேவா விவேகானந்தன் தலைமை தாங்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பிற்பகல் அமர்வில் கோவில்பட்டி மைக்ரோகிரின் வளர்ப்பு செயல்பாட்டாளர் கோ. சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள “இது எங்கள் […]
இந்திய ஆக்கி அணியில் விளையாடிய கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மணிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச ஜூனியர் ஆக்கிபோட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட கோவில்பட்டி எஸ்.,எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மணிமாறனை ஆக்கி இந்தியா தேர்வு செய்தது. பெல்ஜியத்தில் நடந்த ஆக்கிப் போட்டியில் விளையாடிய […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்பியல் கழகம் சார்பாக இன்று 20-7-2026 காலை “சூரிய ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் (பொ) அ.பாண்டியராணி தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். கோவில்பட்டி, சோலரிஸ் ரீஜென் டெக்னாலஜி பிரைவேட் லிட்., நிர்வாக இயக்குநர் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சூரிய ஆற்றல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து உரையாற்றினார். மதியம் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வானியல் மன்றம் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் இந்த ‘டேக் டைவர்ஷன் மாடல்’ (Take Diversion Model) தவெக அரசு திட்டமிட்டுக் குறிவைத்து வேட்டையாடி வருகிறது,. கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், […]
முதல் அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் காலை 8 மணி முதல் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன்,கோவில்பட்டி கருணாநிதி, பு மற்றும் தூர் […]
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் 1974-77 ம் ஆண்டு கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் & தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒவ்வொரு மாதமும்இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றன, அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான இலவச கண் பரிசோதனை முகாம் 26.7.2026 ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,யில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை […]







