• April 19, 2025
கோவில்பட்டி

புனித வெள்ளி: கோவில்பட்டியி ல் கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை ஊர்வலம்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று  நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.  பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது  அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தினர். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி […]

செய்திகள்

`தமிழ்நாடு, எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்’- மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார் விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு […]

செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு அபராதம்

ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் காணப்பட்ட குறைபாடுகளை அடிப்படையாக கொண்டு 3 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகம் அபராதம் விதித்து உள்ளது.. வங்கி கடன் வழங்குவதற்கான கடன் முறை வழிகாட்டுதல்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் தொடர்பான மீறல்களுக்காக கோடக் மஹிந்திரா வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.61.4 லட்சம் அபராதம் விதித்தது. KYC விதிமுறைகளை பின்பற்றாததற்காக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிக்கு  ரூ.38.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.29.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

செய்திகள்

ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம்; மத்திய அரசு விளக்கம்

நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையானது  வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை”தேர்ந்தெடுக்கப்பட்ட […]

கோவில்பட்டி

ஆன்லைன் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை

தேசியமுற்போக்கு திராவிடகழக பொதுசெயலாளர் பிரேமலதா  உத்தரவின் படி தேமுதிக உறுப்பினர் கார்டு பெறுவதற்க்கு  பயன்படுத்த வேண்டிய லிங்க் https://members.dmdkparty.com/ இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் கோவில்பட்டியில் தனியார் கம்யூட்டர் சென்டரில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம், கயத்தார்,புதூர் பகுதிகளிலும் முகாம் நடைபெற […]

தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி தலைமை தாங்கினார்.மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் உதவி கண்டண்ட் சாந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை  ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் அருண்பிரசாத் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் […]

சினிமா

டாக்டர்களின் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ

2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. இந்த படத்தை தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘இறுகப் பற்று’ படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். இதனையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்காதநிலையில்,  சமீபத்தில் அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாட்டின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களை துன்புறுத்தும் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி  கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ்குமார்,கோவில்பட்டி ஜமாத் […]

செய்திகள்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரிய வியாழன்,பாதம் கழுவும் நிகழ்வுகள் நடைபெற்றது இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதா சால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார்  பெரிய வியாழனான இன்று மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்  1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு அப்பம், ரசம் என நற்கருணையை ஏற்படுத்தினார் . […]

செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக., பாஜக கண்டனம்

தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலைய துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. இதையொட்டி அமைச்சர் சேகர் பாபு, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது நினைவிடத்தில் கோவில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன […]