2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் . பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தீர்ப்பிடப்பட்டு பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்துச் செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பப்படுத்தினார்கள். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும் 19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது. மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில் லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது, ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் […]
கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபபெற்றது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு செல்வ விநாயகரருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்த்தனர், கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் உள்பட […]
இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார். பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்து மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார் 1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு நற்கருணையை ஏற்படுத்தினார் . 2 . தன் சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் […]
கோவில்பட்டி திருமங்கை நகரில் ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்கபெருமாள் ஆலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் வீரலட்சுமி நரசிம்மர் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா 25-ந் தேதி தொடங்கியது,.,தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இரவில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன,. பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்,. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவில் […]
கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் யுகேஜி யிலிருந்து முதல் வகுப்பிற்கு தகுதி பெற்ற இளம் மழலையர்களுக்கு பட்டமளிப்பு செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் சுரேஷ்குமார்,பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கோவில்பட்டி கிளை உதவி மேலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு மழலை குழந்தைகளுக்கு […]
ஒவ்வொரு வருடமும் ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்வது வழக்கம். தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார் ..இதில் ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களாக முத்துகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்தனர்..இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன்,மாவட்டச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் […]
கோவில்பட்டி மில் தெரு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கும் சவுந்தர் என்பவருக்கும் இடையே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது,’ . இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவினர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாக கூறி லெட்சுமி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு முன்பு இன்று காலை ததிடீரென தர்ணா போராட்டத்தில் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில்.பங்குனி பெருந்திருவிழா ஏப்ரல் 5 -ந் தேதி தொடங்கி 15-ந்த்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி அலங்காரம் வீதி உலா நடக்கிறது. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 13 அன்று தேர் திருவிழா நடக்கிறது, 14-ந் தேதி தீர்த்தவாரி ,15 -ந் தேதி தெப்பத்திருவிழா, அம்மன் பவனி நடக்கிறது. பங்குனி […]
கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்துள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் சொர்ணமலை கதிரேசன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல் தான் மூலவராக காட்சி அளிக்கிறார். தினசரி பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில்முருப்பெருமான் போல் சந்தனத்தில் வேலுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்த நாட்கள் மிகவும் சிறப்பபானதாக இருக்கும். பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் […]