தூத்துக்குடியில் `ஹேப்பி ஸ்ட்ரீட்’ நடத்த அனுமதிக்க கூடாது; இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவிசண்முகம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அலுவலகம் சென்று அளித்த கோாரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற `ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அதிகளவு மக்கள் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இளைஞர்களுக்குள் அடிதடி போன்ற விபரீத முடிவுகள் ஏற்பட்டது. .திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் சமுதாய ரீதியான பிரச்சினை […]