தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; கோவில்பட்டியில் அக்டோபர் 17 நடக்கிறது
தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 3-ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
10-ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. 17-ம் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 31-ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.