கழுகுமலையில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்காததை கண்டித்தும் புதிய குடிநீர் கட்டணம் இணைப்பிற்கு லஞ்சம் அதிகம் வாங்குவதாக புகார் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.கழுகுமலை மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த மாவட்ட பொதுச் செயலாளர் வேலு ராஜா, பொருளாளர் கே.கே.ஆர். கணேசன், துணை தலைவர் ராஜ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன், கோவில்பட்டி நகர பொதுச்செயலாளர் விஜயகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,.அவர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்க கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.
மேற்கண்ட தகவலை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா.ஜ.க. ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தெரிவித்து உள்ளார்.
