தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உயர் மருத்துவ சிகிச்சைக்கான புதிய கட்டிடம்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உயர் மருத்துவ சிகிச்சைக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு உள்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர். கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கட்டிடத்தின் தரம் பற்றி பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர். பணிகள் எப்போது முடியும் என்றும் கேட்டனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டாக சென்று பார்வையிட்டனர். நோயாளிகளிடம் மருத்தவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் ஏதாவது குறைகள் இருக்கிறதா என்றும் கேட்டறிந்தனர்.
அமைச்சர்களுடன் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வநாயகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர். சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் சென்றனர்.