• June 5, 2025

கோவில்பட்டியில் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா

 கோவில்பட்டியில் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா

கோவில்பட்டி நகர திமுக சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நடந்தது.

பேருந்து நிலையம் அருகே நடந்த விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி,  கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி – சேலை, இனிப்பு மற்றும் உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,நகர அவைத் தலைவர் முனியசாமி,மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி, புஷ்பராஜ்,மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி,நகரப் பொருளாளர் ராமமூர்த்தி,நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி,விஜயன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

இதேபோல்,கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள மத்திய ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் முருகேசன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,வழக்கறிஞர் ராமச்சந்திரன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசோக் குமார்,முருகன், மாரீஸ்வரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,ஒன்றிய மகளிரணி பாலம்மாள், தொமுச நாகராஜன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்னுத்துரை, கனகராஜ்,சுற்றுச்சூழல் அணி கணேசன்,ஒன்றிய பொருளாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ராஜீவ்நகர் பகுதியில் உள்ள நீடிய வாழ்வு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *