• June 6, 2025

கோவில்பட்டி புத்தக கண்காட்சி: பார்வையாளர்கள் டெலஸ்கோப்பில் நிலாவை பார்க்க ஏற்பாடு

 கோவில்பட்டி புத்தக கண்காட்சி: பார்வையாளர்கள் டெலஸ்கோப்பில் நிலாவை பார்க்க ஏற்பாடு

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே காந்தி மண்டபத்தில் மே 21 தொடங்கிய புத்தக கண்காட்சி  ஜூன் 9 வரை நடக்கிறது. வருகிறது. ஒவ்வொரு நாளும் ஓவியம்,கட்டுரை,உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடந்த வான் நோக்குதல் நிகழ்வில் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த வாசகர்கள் டெலஸ்கோப்பில் நிலாவை பார்வையிட ஏற்பாடு செய்யபப்ட்டது.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்,தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்வில் நிலாவை டெலஸ்கோப்பில் பார்வையிட்டு வாசகர்கள் அசந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.டி. எம். கலைமற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்துகொண்டு வான் நோக்குதல் நிகழ்வில் நிலாவை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார்.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவிவர்மா, ராஜபாண்டி, ரமேஷ்,ஆவுடையப்பன்,காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *