Month: November 2023

செய்திகள்

சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருக்கக்கூடிய நிலை ;

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் விடியா தி.மு.க அரசு எடுக்கவில்லை என்றும்,மழை நீர் எங்கும் தேங்கவில்லை என அமைச்சர்கள் பொய்  சொல்லிவருகிறார்கள் என்றும்,ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேரிடர் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு ஓடிவந்து உதவும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க மட்டும்தான் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அ. து. மு. க. அமைப்புச் செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், பென்சில் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை […]

கோவில்பட்டி

5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்  வர்த்தகரெட்டிபட்டி , திம்மாராஜபுரம், கூட்டுடன்காடு, குமாரகிரி, அல்லிகுளம் ஆகிய 5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கோவில்பட்டி

கன மழைக்கு  எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது

எட்டயபுரம் சமஸ்தானம் ராஜா மகாராஜா காலத்தில் 2௦0 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறங்களிலும் படிக்கட்டுகளுடன்  கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் கட்டப்பட்டது. இந்த தெப்பக்குளம் மன்னர்கள் காலத்தில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த தெப்பகுளம் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது.தெப்பக்குளத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் இன்று  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தெப்பக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கும், நீர் செல்லும் பாதையினை சுத்தப்படுத்துவதற்கும் துறை […]

தூத்துக்குடி

கடன் தகராறில் அனல் மின்நிலைய ஊழியரை கடத்தி தாக்குதல்; 2 பேர் மீது

தூத்துக்குடி அனல் மின்நகரை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 59). அனல் மின் நிலைய ஊழியரான இவர்‌ தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முத்தையாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது43) என்பவர் மூலம் பிரதீப் (30) என்பவரிடம் ரூ. 2,10,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகைக்கு  ரூ. 1லட்சத்து 47 ஆயிரம் வரை வட்டி செலுத்தி உள்ளாராம். இந்நிலையில் கேம்ப்-2 பகுதி பஸ் நிறுத்தத்தில் லிங்கதுரை நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த பிரதீப், சக்திவேல் […]

தூத்துக்குடி

மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு தூத்துக்குடியில் நாளை நடக்கிறது; கனிமொழி எம்.பி.

தமிழ்நாட்டை 2030 ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் வலிவு கொண்ட பொருளாதாரமாக மாற்றுவது என்ற முதல் -அமைச்சரின் லட்சிய கனவுகளை நோக்கிய பயணத்தின் ஒருபடியாக சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு நாளை 30-ந்தேதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில்    மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில் மையம் பொது […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி ; டி. ஜெயக்குமார் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதா  நினைவு நாள் அன்று உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அனுமதி கடிதம் வழங்கினார்கள்  அப்போது மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆர் எஸ் ராஜேஷ், கேபி கந்தன், வழக்கறிஞர் […]

கோவில்பட்டி

3333 அகல் விளக்குகள் ஏற்றி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் கங்கா ஆரத்தி

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் தெப்பகுளத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 3333அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. தெப்பக்குளத்தின் சுற்றுசுவர், படிக்கட்டுகள் முழுவதும் அகல்விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் ஏற்றினர். கோவில் குருக்கள் மற்றும் பூசாரிகள் தெப்பகுளத்தில் அகல்விளக்குகளை மிதக்க விட்டனர். மேலும் குளத்தில் புனித நீர் ஊற்றி பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். இந்த […]

ஆன்மிகம்

சித்தர்கள் நித்யவாசம்  செய்யும் திருமலைநம்பி மலைக்கோவில்

நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திபெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையை போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்கு திகழும்  மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரை கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாக கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி. திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு […]

தூத்துக்குடி

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 352 மனுக்கள் பெறப்பட்டன.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இணைப்பு சக்கரம் […]

தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் மகாலிங்கம், சாமுவேல், முத்துப்பாண்டி, காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம்பகுதியில் உள்ள அருள்(வயது 50) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக […]