3333 அகல் விளக்குகள் ஏற்றி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் கங்கா ஆரத்தி
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் தெப்பகுளத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 3333அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. தெப்பக்குளத்தின் சுற்றுசுவர், படிக்கட்டுகள் முழுவதும் அகல்விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் ஏற்றினர்.
கோவில் குருக்கள் மற்றும் பூசாரிகள் தெப்பகுளத்தில் அகல்விளக்குகளை மிதக்க விட்டனர். மேலும் குளத்தில் புனித நீர் ஊற்றி பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
இந்த மகா ஆரத்தியை பக்தர்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவெள்ளத்தில் தெப்பக்குளம் காட்சி அளித்தது.