மாலை நேரம்..வினோத்..அந்த 8-ம் நம்பர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான்… வீடு வாடகைக்கு விடப்படும்..தொடர்புக்கு அலைபேசி எண்..குறிப்பிடப்பட்டிருந்தது.வினோத் அந்த எண்களை தனது செல் போனில் ஏற்றினான்.பின்னர் அந்த எண்ணுக்கு அவன் தொடர்பு கொள்ள முயன்றான். பிசியாக இருந்தது. சிறிது நேரம் கழித்துப் பேசலாம் என்று நினைத்தவன் வீட்டை நோட்டமிட்டான்.கேட்டுக்கு வெளியே நின்று பார்த்தபோது சிறிய வீடு போல் தெரிந்தது .நான் ஒரு ஆள்தானே..சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.எதிர்முனையில் ஒரு பெண் குரல்… ஹலோ..யார் […]
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை..சோ.. என்று பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது.தெருக்களில் தண்ணீர் பெருகி ஓடியது. சாதாரண மழை என்று எல்லோரும் நினைக்க நேரமாக நேரமாக மழை நீடித்துக்கொண்டிருந்தது. இரவு ..நெருங்க..நெருங்க..இடியுடன் மழை கொட்ட..இன்னும் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என்று நினைத்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரே இருட்டு..வழக்கம் போல் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று காத்திருக்க..மின்சாரம் வரவில்லை. என்னாச்சு..கரண்டு வரலை..எங்கேயும் டிரான்ஸ்பார்மர் வெடிச்சுட்டா..? பலரும் பலவிதமாக பேச..வீடுகளில் மெழுகுவர்த்திகள் மின்னத் தொடங்கின. […]
நகரில் பெரிய ஓட்டல் அது..காலை பத்து மணி அந்த ஓட்டல்முன் போலீஸ் ஜீப் வந்து நின்றது… இன்ஸ்பெக்டர் சுனில் மற்றும் போலீசார் ஓட்டலின் மூன்றாவது மாடியில் முப்பதாம் நம்பர் அறைக்கு விரைந்தனர். மோப்ப நாய் ஜாக்கி அறைக்கதவை காலால் பிராண்டி வேகமாக குரைக்க போலீஸ்காரர் அதன் கழுத்தில் கிடந்த கயிறை இறுக்கிப்பிடிக்க..ஓட்டல் ஊழியர் ஓடிவந்து மாற்றுசாவி போட்டு கதவை திறக்க இன்ஸ்பெக்டர் வேகமாக உள்ளே சென்றார். படுக்கை அறையில் இருபத்துஐந்து வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் […]
அழகேசன்…அழகானவர். ஆனால் கொஞ்சம் கடுமையானவர். தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பார். அவரது மனைவி ரஞ்சிதம்.அமைதியானவர்.கணவன் சொல்லை மீறமாட்டார்.அவரை கண்டாலே அவருக்கு ஒரு பயம். கணவர் சத்தம் போட்டு பேசினால் நடுங்கிப்போவார். அன்று காலை அழகேசன் மார்க்கெட்டுக்குப் போனார்.ஒரு கூடையில் காய்கறிகள் வாங்கிவந்தார்.அதே கூடையில் பத்து கொய்யாப்பழங்களையும் வாங்கிப்போட்டிருந்தார்.அந்த பழங்கள் நன்றாக பழுத்திருந்தன. மார்க்கெட்டுக்கு சென்றுவந்த அழகேசன் தன் மனைவியிடம் காய்கறி கூடையை கொடுத்தார்.காய்கறிகளை கூடையிலிருந்து தனியே எடுத்துவை என்றார். ரஞ்சிதம் அவர் சொன்னபடி காய்கறிகளை தனியே எடுத்து […]
ரமேஷ்…கட்டிளங்காளை..முறுக்கேறிய உடம்பு…விவசாய கூலி…! மது குடிக்கும் பழக்கம் உண்டு. மது குடித்துவிட்டால் ஆள்மாறிவிடுவான்..ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் என்று பலமொழிகளில் யாரையாவது திட்டுவான்.. ரமேசின் மனைவி ராக்காயி..கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள்.வயல்வேலைக்கு செல்வாள்.அதில்கிடைக்கும் பணத்தில் சமைத்து ரமேசுக்கு சாப்பாடு கொடுப்பாள்.ஆனால் ரமேஷ் தான் உழைக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்வான். தட்டிக்கேட்டால் ராக்காயியை அடித்து உதைப்பான்.அவள் கறுப்பாக இருப்பதாக சொல்லி அவள் மனதை நோகடிப்பான்.பொறுத்து பொறுத்து பார்த்த ராக்காயி ஒருநாள் கணவனை விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாள். ரமேசும்..போடி..நீ இல்லன்னா..என்னால […]
ரமேஷ்..அந்த ரெயில் தண்டவாளத்தை நோக்கி வேகமாக நடந்தான்..அதிகாலை நேரம்..ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.அவனது கால்கள் விரைந்து நடந்தன.மனதில் ஒரு.. கோபம்….கண்களில் ஒரு வெறி.. அதிகாலையிலே அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த வழியாகத்தான் போகும்..பலமுறை பார்த்திருக்கேன்…இன்னைக்கும் சரியான நேரத்திலே வந்திடும்..முடிச்சிட வேண்டியதுதான்.. ஒரு வேளை சீக்கிரம் ரெயில் வந்திட்டா..மிஸ்ஆகிடும்..அடுத்த ரெயில்வர நேரமாகும்..கூட்டம் வந்திடும்..அப்புறம் ஒண்ணும் செய்யமுடியாது.. நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்..அது அவன் போட்டிருந்த செருப்புக்கு பொறுக்கவில்லை..படக் என்று ஒரு செருப்பு அறுந்து..காலைவாரியது..ச்சே..நேரம் கெட்ட நேரத்திலே..இதுவேற உயிரைவாங்குது..இப்போ செருப்பா முக்கியம்..ம்..இரண்டு […]
ஒரு ஊரிலே ஒரு தாத்தா இருந்தார்.அவர் பேரன்களுக்கு புதிர் கதை சொல்வார்.விடை சொல்லாவிட்டால் விடமாட்டார். இதனால் தாத்தா கண்ணில் மாட்டாமல் பாட்டியிடம் பேரன்கள் ஓடிவந்தனர்.பாட்டி அவர்களை அரவணைத்து அன்பாக பேசுவார். அப்போது அவர்கள் பாட்டி நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள் என்று பேரன்கள் கேட்க பாட்டி சிரித்தபடி …நான் கதை சொல்லட்டுமா என்று சொல்லத்தொடங்கினார்.ஒரு ஊரிலே ஒரு பாட்டி தாத்தா இருந்தாங்க…பாட்டிக்கும் தாத்தாவுக்கும் எப்போதும் சண்டைதான்.தாத்தா சொல்லுறதை பாட்டி கேட்கமாட்டாங்க..பாட்டி சொல்லுறதை தாத்தா கேட்கமாட்டாங்க… ஏன்னா இரண்டு […]
ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருந்தார்.அவர் எப்போதாவது பேரன்களுக்கு கதை சொல்வார். அன்று மாலை நேரம், .பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய பேரன்கள் .கை கால் முகத்தை கழுவிவிட்டு திண்ணைக்கு வந்தனர். .அங்கே அமர்ந்திருந்த தாத்தா தன் பேரன்களை பார்த்து என்ன பேரன்களா..பள்ளிக்குப் போயிட்டு வந்திட்டிங்களா..உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டார். பேரன்கள் … தாத்தா ஏதாவது புதிர் கதை சொல்லி விடை கேட்பார் என்று நினைத்து..வேண்டாம் தாத்தா..பள்ளிக்கு போயிட்டுவந்தது ரொம்ப களைப்பா இருக்கு தாத்தா என்றனர். […]
ஒரு வீட்டில் ஒரு தந்தை.தினமும் அவர் தன் குழந்தைகளுக்கு இரவில் கதை சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். .அன்றும் அவர் குழந்தைகளை பார்த்து குழந்தைகளே உங்களுக்கு இன்று ஒரு புதிர் கதை சொல்லப்போறேன் என்றார். உடனே குழந்தைகள்..என்ன புதிர் கதையா?..எங்களால் கணடு பிடிக்க முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்டனர்.அதற்கு அவர்..பெரிய புதிர் ஒன்றும் கிடையாது.சாதாரண புதிர்தான் .. நகைச்சுவையாக இருக்கும் என்றார். அப்படியா சொல்லூங்கள் என்று குழந்தைகள் கதை கேட்க தயாரானார்கள்….தந்தை கதை சொல்ல தொடங்கினார். ஒரு ஊரிலே […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022