• June 4, 2025

சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருக்கக்கூடிய நிலை ; நேரில் பார்வையிட்ட டி. ஜெயக்குமார் பேட்டி 

 சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருக்கக்கூடிய நிலை ; நேரில் பார்வையிட்ட டி. ஜெயக்குமார் பேட்டி 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் விடியா தி.மு.க அரசு எடுக்கவில்லை என்றும்,மழை நீர் எங்கும் தேங்கவில்லை என அமைச்சர்கள் பொய்  சொல்லிவருகிறார்கள் என்றும்,ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேரிடர் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு ஓடிவந்து உதவும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க மட்டும்தான் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அ. து. மு. க. அமைப்புச் செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், பென்சில் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

மழைநீர் வடியாத இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர்,மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், பெய்து வரும் கன மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. வருமுன் காப்பது தான் அறிவாளித்தனம்,வந்த பிறகு காப்பது கோமாளித்தனம்.

சென்னை மாநகரில் மழை நீரை வெளியேற்ற முறையான கால்வாய்களை சீர் செய்து, அவற்றை ஆற்றுப்பகுதிகளில் முறையாக இணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் மிக முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை மட்டும் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதே தவிர, குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மழை நீர் மட்டுமின்றி கழிவு நீரும் கலந்து குடிசை பகுதிகளில், குடியிருப்புகளில் புகுந்திருப்பதை பார்க்க முடிந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களை நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது மாவட்ட கழக செயலாளர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களை நேரில் சந்தித்தும், அவர்களுக்கு ஆறுதல் கூறியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார்கள்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை வழங்கும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க தான்,கழக தொண்டர்கள்தான். 

சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும், தேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியாமல் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் திணறி வருகிறது.சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டுள்ளது.. சென்னையில் முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே மழை நீர் அதிக அளவில் தேங்கி  நிற்கிறது.அரசு அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் நீந்தி செல்லும் அளவுக்கு மழை நீர்  தேங்கியுள்ளது.சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளும் அதிக அளவில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

மழை நீரால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதி மக்களும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்ததாகவும், அதிகபட்சமாக ஆவடியில் 19 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி இருந்தும்கூட, ஒரு சொட்டு மழை நீர் கூட சாலைகளில் தேங்கவில்லை என அப்பட்டமாக திமுக அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள்.. 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்து மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டதாக திமுக அரசு கூறியது, அந்தத் தொகையில் நான்கு படகுகளை வாங்கி விட்டிருந்தால் கூட மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

சென்னையில் அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்தும், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பொது போக்குவரத்தை மட்டுமே மாணவர்கள் நம்பி இருக்கக்கூடிய நிலையில், எப்படி கொட்டும் மழையில் நனைந்து கொண்டு கல்லூரிக்கு செல்ல முடியும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் உள்ளது என்பதை வெளிப்படுத்தவே கல்லூரிகளை செயல்பட வைத்துள்ளார்கள்.

பருவ மழை தொடங்குவதற்கு முன்பே அமைச்சரவையை கூட்டி, மழைநீர் தேங்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, சுகாதாரத்துறை, குடிநீர், கழிவுநீர் அகற்றுவாரியம் என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து பணிகளை ஏன் மேற்கொள்ளவில்லை.

 

மிழக முதலமைச்சர் கூறும் கருத்துக்களை, எந்த அமைச்சர்களும், அதிகாரிகளும், மதிப்பதில்லை. முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த அதிகாரிகளும் பணியாற்றுவது கிடையாது. 

முதலமைச்சராக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பது, பணிகளை தொடங்கி வைப்பது மட்டுமே நிர்வாகம் அல்ல,தொடங்கி வைத்த பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்வாய் பணிகளை 98 விழுக்காடு நிறைவு செய்து விட்டதாக திமுக அரசு சொல்லி இருப்பது, வாக்களித்த மக்களுக்கு காதில் பூ வைக்கும் செயல். 

திராவிட மாடல் அரசு என பிரசாரம் செய்து வரும் திமுகவினர் திராவிட தலைவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட என்ன காரணம்? 

குரூப் 2 தேர்வுக்கான காலி பணியிடங்கள், சுமார் இருபத்தைந்து ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், 300 முதல் 400 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது என அறிவித்து, அதற்கான தேர்வுகளை மட்டும் நடத்துவது ஏன்.  அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 

தலைவரையும் நியமிக்க முடியாமல், உறுப்பினர்களையும் நியமிக்க முடியாமல் திணறிவரும் திமுக அரசு, செயலாளரையும் மாற்றிவிட்டது. தற்போது 3 லட்சம் காலி பணியிடங்கள் தமிழக அரசு துறைகளில் காலியாக  உள்ள நிலையில் அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார் .

https://fb.watch/oEusf-BSAc/?mibextid=Nif5oz

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *