கரிசல்குளம் கிராமத்தில் கலையரங்கம் கட்டும் பணி; கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கரிசல்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான புதிய கலையரங்கம் கட்டப்படுகிறது.
இதற்கான கட்டிட பணியை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பகுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில், பஞ்சாயத்து தலைவர் சிவ ஜோதி, பஞ்சாயத்து துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபி,முருகன், மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.