• June 6, 2025

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டிய மாணவ, மாணவிகள்

 கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டிய மாணவ, மாணவிகள்

நாடு முழுவதும் ஜூன் 5 ம் தேதி(இன்று) சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த கலை இலக்கிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரெயில் நிலைய மேலாளர் ராஜாசங்கர் தலைமை தாங்கினார்.

சுகாதார ஆய்வாளர் குருநாத், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் அருள் காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி நகராட்சி 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்து சுற்றுச்சூழல் தின போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

சுற்றுச்சூழல் விருதாளர் முத்து முருகன், உடற்கல்வி ஆசிரியர் ஆகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி மாணவன் சூர்யா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *