கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக,மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை , நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், தங்கச்சாமி,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மிக்கேல்,
கிளைச் செயலாளர்கள் சேவியர் லாரன்ஸ்,பேதுரு செல்வம்,மாரியப்பன்,முத்துமாடத்தி,வர்த்தக அணி சூசை,பிரதிநிதி சாமிநாதன்,நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் நிறுவனத் தலைவர் நாகராஜன்,மருத்துவக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
