பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது.

இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்

இந்த துயர சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அவசரம், அவசரமாக விழாவை நடத்தியதும்தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக பெங்களூரு கலெக்டர் ஜெகதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே 11 பேர் பலியான விவகாரத்தில் ஆர்.சி.பி. அணி நிர்வாகம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்பேரில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர், உதவி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக : செய்துள்ளனர். ஆர்.சி.பி. அணியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த நிகில் சோசாலே, டி.என்.ஏ. நிறுவனத்தை சேர்ந்த சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
