கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆக்கி; தூத்துக்குடி மாவட்ட அணிக்கு 2 வது வெற்றி


ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் 3 மைதானங்களில் நடந்து வருகிறது
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் போட்டியாக தூத்துக்குடி மாவட்ட அணி 2-0 என்று கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை தோற்கடித்தது. தூத்துக்குடி மாவட்ட அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும்.

அடுத்து திருநெல்வேலி மாவட்ட அணி திருப்பூர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. விருதுநகர் மாவட்ட அணி அரியலூர் மாவட்ட அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
மதுரை மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணியை வீழ்த்தியது.

சேலம் மாவட்ட அணியும் ராணிப்பேட்டை மாவட்ட அணியும் மோதிய போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது கிருஷ்ணகிரி மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியை தோற்கடித்தது.
திண்டுக்கல் மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை படுதோல்வி அடையசெய்தது.

இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியின் தலைவராக சர்வதேச ஆக்கி வீரர் மாரீஸ்வரன் அரியலூர் மாவட்ட அணியின் அணித்தலைவராக சர்வதேச ஆக்கி வீரர் கார்த்தி மற்றும் திருநெல்வேலி மாவட்ட அளவில் தலைவராக சதீஷ் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்

இந்த போட்டியில் சர்வதேச ஆக்கி வீரர்கள் கோவில்பட்டியில் விளையாடி வருவது சிறப்பு அம்சமாகும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கான தேர்வு செய்யப்படுகிறார்கள்.
