மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி: கால் இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி அணி தகுதி


கோவில்பட்டியில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஆக்கிபோட்டி நடைபெற்று வருகிறது. 3 மைதானங்களில் நடக்கும் இப்போட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்றன,
இன்று வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் முதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

இரண்டாவது போட்டியில் சேலம் மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வீழ்த்தியது.
மூன்றாவது போட்டியில் கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் அணிகள் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் முடிந்தது.
மற்றொரு மைதானத்தில் காலை நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் ராணிப்பேட்டை மாவட்ட அணியை தோற்கடித்தது.

அரியலூர் மாவட்ட அணி 6- 0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை படுதோல்வி அடைய செய்தது.
மூன்றாவது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணி 13-1 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
கன்னியாகுமரியும் நாமக்கல் மாவட்ட அணியும் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது

மாலையில் நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு மாவட்ட அணியை வீழ்த்தியது.
திருவண்ணாமலை மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருவள்ளுவர் மாவட்ட அணியை தோற்கடித்தது.
தர்மபுரி மாவட்ட அணி 3-2 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் மாவட்ட அணியை தோல்வி அடைய செய்தது.

நீலகிரி மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
லீக்கின் கடைசி போட்டியாக திருச்சி மாவட்ட அணி 3 – 0 என்ற கொள் கணக்கில் தேனி மாவட்ட அணியை வீழ்த்தியது.
நாளை கால் இறுதி ஆட்டம்
நாளை நடைபெறும் கால் இறுதி போட்டியில் காலை 6:30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட அணியும் சென்னை மாவட்ட அணியும் விளையாடுகிறது.
இரண்டாவது கால் இறுதி போட்டி 8.30 மணி அளவில் திருநெல்வேலி மாவட்ட அணி தஞ்சாவூர் மாவட்ட அணியை எதிர்கொள்கிறது மூன்றாவது கால் இறுதி போட்டி 10:30 மணியளவில் விருதுநகர் மாவட்ட அணி கோயமுத்தூர் மாவட்ட அணியை எதிர்கொள்கிறது நான்காவது கடைசி கால் இறுதிப்போட்டி மதியம் 12 30 மணியளவில் மதுரை மாவட்ட அணி நீலகிரி மாவட்ட அணியை எதிர்கொள்கிறது நாளை நடைபெறும் கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அரை இறுதி போட்டியிலும் மாலை இறுதி போட்டியிலும் பங்கேற்கின்றன,
