கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி அறிவிப்பு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே. இராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி வருகிற 4 ந் தேதி முதல் 8 ந்தேதி வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது.

கே ஆர் கலைக்கல்லூரி மைதானம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன
மொத்தம் 33 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

நடப்புச் சாம்பியன் ஆன தூத்துக்குடி மாவட்ட அணி, ஏ பிரிவில் கலந்துகொண்டு விளையாட உள்ளது. இந்த பிரிவில் கடலூர் , வேலூர், தென்காசி , திருவாரூர் மாவட்ட அணிகள் இடம் பெற்றுள்ளனர.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் மாவட்ட அணி தேர்வு நடைபெற்றது இதில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்து 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட அணியை தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம் மற்றும் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி அறிவித்தனர் வீரர்கள் வருமாறு :-
கோல் கீப்பர்- அருண் மற்றும் திவாகரன் தடுப்பு ஆட்டக்காரர்கள்- மதுபாலன், அஜித் குமார் , நிசி தேவ அருள், அரவிந்த், சுபாஷ், சர்வதேச ஆக்கி வீரர் மாரீஸ்வரன் (அணித்தலைவர்), திலீபன், விக்னேஷ், ராமநாதன்,
முன்கள ஆட்டக்காரர்கள் நந்தகுமார், மனோஜ் குமார் , நவீன் ராஜ்குமார், மதன், முருகேசன், முத்துக்குமார், கௌதம்.
அணியின் பயிற்சியாளர் -முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின்.
அணி மேலாளர் -ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைச் செயலாளர் மாரியப்பன்.
மருத்துவர்- பாலாஜி
