கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது.
ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
54 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக சேலைகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தளவாய்புரம் ஆதிபராசக்தி மன்ற தலைவர் ராஜ் தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா, மாவட்ட தகவல் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், இந்திரா நகர் மன்றம் அழகு மாணிக்கம், மந்திதோப்பு பண்டார முருகன், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், மன்ற பொறுப்பாளர்கள் கற்பகவள்ளி, ராதா, விஸ்வநாத், இராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
