• June 5, 2025

102 மாணவர்களுக்கு கருணாநிதி உரை எழுதிய திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கிய திமுகவினர்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  102 வது பிறந்தநாள் விழா  தமிழகம் முழுவதும் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது

செம்மொழி நாளாக கொண்டாடப்படும் இந்நாளில் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி  பிரகாஷ் தலைமையில் கோவில்பட்டி  22 வது  வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில்  பங்களா தெருவில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின்  உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து  பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி  கருணாநிதி  உரை எழுதிய திருக்குறள் புத்தகங்களை இலவசமாக 102 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *