• June 6, 2025

குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும்; ஆட்சியர் இளம்பக்வத் வேண்டுகோள்

 குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும்; ஆட்சியர் இளம்பக்வத் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் ஏஏஒய்ஃபிஹெச்ஹெச் குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 9,27,955 பேர் உள்ளனர்.

இவர்களில் இதுவரை 7,94,044 பேர் மட்டுமே கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதம் 1,33,547 பேர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.

அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெற தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்வது அவசியம்.

வெளி மாவட்டங்களில் தங்கி புரிந்துவருவோர், பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவர், மாணவிகள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டை எண்ணைத் தெரிவித்து தங்கள் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் .

இவ்வாறு ஆட்சியர் இளம்பகவத் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *