• June 4, 2025

கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு

 கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு

கோவில்பட்டி செயற்கை  புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது  அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டி நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. இரவு 7 மணிக்கு கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை முன்னாள் இந்திய ஆக்கி வீரரும்,  அர்ஜுனா விருது பெற்றவருமான என். முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார்

பரபரப்புடன் தொடங்கிய இறுதி போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின.  

இதில் 3:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

இப்போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர்கள் மணிகண்டன் 5வது நிமிடத்திலும் (பீல்டு கோல்), நாச்சப்பா 16வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் கார்த்தி 41வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 3 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து முதலிடம் பிடித்தனர்.

புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர்கள் பிரகாஷ் திர்கே 15வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மற்றும் சுதீப் மின்ஸ் 46வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மொத்தம் 2 கோல்கள் அடித்து இரண்டாமிடம் பெற்றனர்.

பாலாஜி குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் சுதிர் டிக்சித்துக்கு வழங்கப்பட்டது.

மேலும் போட்டிகளில் பங்கேற்ற அணிகளில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் கே.கே.அப்னாஸ்  சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெற்றார்., கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வீரர் எம்.அஜித் குமார் சிறந்த தடுப்பாளர்கான விருது, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர்கள் மாரீஸ்வரன் சக்திவேல் சிறந்த நடுகள ஆட்டக்காரர் விருது மற்றும் எஸ்.கார்த்திதொடர் நாயகன் விருது, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர் மதியாஸ் டாங் முன்கள   ஆட்டக்காரருக்கான விருது சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி வீரர் ஜே.அருண் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது பெற்றனர்.  

போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்ற நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்கு இலட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஆக்கி கோப்பை மற்றும் ரூ. 2 லட்சத்துக்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 

இரண்டாமிடம் பெற்ற புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணிக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் இலட்சுமி அம்மாள் நினைவு ஆக்கி கோப்பை வழங்கப்பட்டது. நான்காமிடம் பெற்ற சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணிக்கு நினைவு கோப்பை வழங்கபட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *