ஓட்டப்பிடாரம் அருகே 2 இடங்களில் உயர்மட்ட பாலங்கள்; அடிக்கல் நாட்டு விழா நடந்தது
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் 2 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
அதாவது ஊருக்கு மேற்கு பகுதியில் மழைக்காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஓடையின் நடுவே உயர்மட்ட பாலம் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் மாணவ மாணவிகள் மழைக்காலங்களில் சிரமம் இன்றி சென்றுவர ஓடையின் நடுவே உயர்மட்ட பாலம் அமைத்துதர வேண்டும் என்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்..
நீண்டகால கோரிக்கையான இதனை நிறைவேற்ற ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் மூலம் ஊருக்கு மேற்கு பகுதியில் ரூ.42.50 லட்சம் மற்றும் தொடக்கப்பள்ளி அருகில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 2 உயர்மட்ட பாலங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அடிக்கல் நாட்டி இன்று பணிகளை தொடங்கி வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்.சுரேஷ், யூனியன் ஆணையாளர்.சிவபாலன், வருவாய் ஆய்வாளர் .செல்வரேகா கிராம நிர்வாக அலுவலர் ராஜன்,மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர்.பிரேமா, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.