• May 9, 2024

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 3 புதிய கிளைகள் திறப்பு

 தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 3 புதிய கிளைகள் திறப்பு

தலைசிறந்த கமர்சியல் செடியூல் வாங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி  தனது புதிய  கிளைகளை கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு மற்றும் தர்மபுரி மாவட்டம் பெரியனஹள்ளி ஆகிய ௩ இடங்களில் ஏ.டி.எம். சி.ஆர்.எம். வசதியுடன் திறந்தது. 

இதில் 534 வது கிளையான கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி கிளையை எஸ்ஆர் டி ட்ரான்ஸ்போர்ட் குரூப் நஞ்சப்பன் திறந்து வைத்தார். 535 வது கிளையான கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு கிளையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் திறந்து வைத்தார். 536 வது கிளையான தர்மபுரி மாவட்டம் பெரியனஹள்ளி கிளையினை பச்சமுத்து கல்வி நிறுவனத் தலைவர் பாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் இது குறித்து கூறுகையில் “ இன்று வங்கியின் 534,535,536 வது கிளையை திறந்துள்ளோம். மேலும் பல கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம் புதிய கிளைகள் திறப்பு விழா மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *