• June 18, 2025

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி

 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.;நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வரும் நிலையில் அன்புமணி மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நாளை வியாழக்கிழமை சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற உள்ள நிலையில்,  2 எம.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2 எம்.எல்.ஏ.க்களும் ராமதாஸ் ஆதரவாளர்கள், எனவே அன்புமணி கூட்டி இருக்கும் பொதுக்குழு கூடத்தில் கலந்து கொள்வதை  தவிர்ப்பதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று அன்புமணி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *