கோவில்பட்டி உண்ணாமலை கலை கல்லூரிக்கு ரெட் ரிப்பன் கிளப் ஆணை

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாநில அளவிலான ரத்ததான நிகழ்வை தமிழ்நாடு அரசு நடத்தியது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புதிய ரெட் ரிப்பன் கிளப்பின் நல்வாய்ப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் அதிகாரி கரங்களால் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய ரெட் ரிப்பன் கிளப்பிற்கு உண்டான அறிவிப்பாணை வழங்கப்பட்டது.
ரெட் ரிப்பன் கிளப் (Red Ribbon Club) ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் முத்துராஜ் மற்றும் மாணவர் சரவணவேல் ஆகியோர் அதனை பெற்றுக்கொண்டனர்.
கல்லூரி தாளாளர் விஜயன் அவர்கள்,கல்லூரி முதல்வர் முனைவர் கா. அண்ணாமலைசாமி, இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
