பாமகவில் குழப்பம்: திமுக காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்- டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது.
இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து தைலாபுரத்தில் சென்னை புறப்பட்டு வந்தார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.,மணி மற்றும் அருள் ஆகியோரை சந்தித்து ராமதாஸ் உடல்நலம் விசாரித்தார்.
பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில்,பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய் அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே? என்று கேட்கிறீர்கள். அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்” என்றார்.
மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ், “போகப்போகத் தெரியும்” என்று பாட்டு பாடினார்”







