கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளிக்கூட வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியே சிதம்பரம் நோக்கி சென்ற ரெயில், பள்ளிக்கூட வேன் மீது மோதியது.இதில் வேனின் ஒருபகுதி நொறுங்கியது. மேலும் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்து […]
நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதத்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய […]
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” : மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கினார்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மாலை 4.35 மணிக்கு, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொது மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் […]
ஆனி வளர்பிறை பிரதோஷம் என்பது தமிழ் மாதங்களில் ஒன்றான ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை (சுக்லபட்சம்) பிரதோஷம் தினம் ஆகும். இந்த நாள் பிரதோஷ விரதத்திற்கும், இறைவன் சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. பிரதோஷம் என்பது நமது சாஸ்திரங்களில் முக்கியமான விரத நாளாகும். ஒவ்வொரு மாதமும் இரு பிரதோஷ நாட்கள் இருக்கும்: * வளர்பிறை பிரதோஷம் (சுக்ல பக்ஷ பிரதோஷம்) *. தேய்பிறை பிரதோஷம் (கிருஷ்ண பக்ஷ பிரதோஷம்) பிரதோஷம் என்றால் “தோஷங்கள் நீங்கும் […]
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை […]
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையில் இஸ்லாமியர்களுடன் இந்துக்களும் இணைந்து, சமூக நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாக மதநல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. ஆண்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் முக்காடு அணிந்து தீக்கங்குகளை தலையில் போட்டும் மாமுனாச்சியை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இது குறித்து பெரியகுளம் கிராம மக்கள் கூறியதாவது:-, “பல […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2.7.2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதற்காக கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதேபோல் கடந்த 1-ந் தேதி முதல் கோவில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி […]
தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு தலைவர் கே.வி.தங்கபாலு, இணை செயலாளர் நித்தின் கும்பல்கர், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் செல்வம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி ஆகியோர் கொண்ட குழு நேற்று கோவில்பட்டியில் உள்ள காங்கிரஸ் சொத்துகள் தொடர்பாக ஆய்வு செய்ய வந்தது. அவர்கள் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், எப்போதும் வென்றான் பகுதியில் உள்ள சொத்துக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வடக்கு […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (7/7/2025) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காகப் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூருக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனம் நிறுத்துவதற்குத் தேவையான வாகன நிறுத்தங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்க ஏதுவாக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்குப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (6/7/2025) […]







