சின்ன குழந்தைகளுக்கு ஒரு பாட்டி தினமும் பல புதிர் கதைகளை சொல்லிவந்தார். அன்று மாலையில் பாட்டியை சுற்றி சின்ன குழந்தைகள் இருந்தனர்.பாட்டி புதிர்கதைகள் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். அந்த குழந்தைகளை பார்த்த பாட்டி என்ன குழந்தைகளா…புதிர் கதை சொல்லட்டுமா என்க ..குழந்தைகள் ஓ..சொல்லுங்க பாட்டி என்றனர்.. பாட்டி கதை சொல்ல தொடங்கினார். ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார்.அவரிடம் தினந்தோறும் ஏராளமானபேர் வந்து ஆசி பெற்று சென்றனர். அப்போது ஒருவர் சாமியாரிடம் வந்து..சாமி…எனக்கு வாழ்க்கையிலே ஒரே […]
அன்று காலை பாட்டி மகிழ்ச்சியாக இருந்தார்..குழந்தைகள் பாட்டி முன் அமர்ந்திருந்தனர்…பாட்டி கதை சொல்லுங்கள் பாட்டி என்று குழந்தைகள் கேட்டனர். அப்படியா .நான் இன்னைக்கு காக்கை கதை சொல்லப்போறேன் என்றார் பாட்டி… ஓ..காக்கா கதையா அது பழைய கதையா..அது வேண்டாம் என்றன குழந்தைகள். அதற்கு பாட்டி சிரித்துக்கொண்டே ..குழந்தைகளே..இது பழைய கதை இல்லை..பழைய கதையிலே ஒரு புதிர்கதை..கேட்கிறீங்களா என்று கேட்டார். உடனே குழந்தைகள் என்ன புதிர்கதையா..ரொம்ப கஷ்டமான புதிரா..என்று கேட்டனர். இல்லை..இல்லை..எளிமையான புதிர்தான்..ரொம்ப சிரிப்பா இருக்கும்..சொல்லட்டுமா என்று பாட்டி […]
தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டது அந்த தனியார் பஸ்.அன்று பஸ்சில் அதிக கூட்டம்.. கண்டக்டர் டிக்கெட் போடத்தயாரானார்.. லேடிஸ் முன்னே போங்க..லேடிஸ் முன்னே போங்க..என்று அவர் குரல் கொடுக்க… பெண்கள் முணங்கியபடி இன்னும் எங்கே முன்னுக்குப்போறது..ஏற்கனவே கூட்டமா இருக்கு…இன்னும் ஆளை ஏத்தப்போறீயளா..சும்மாவே மூச்சுவிடமுடியல..என்றனர். கண்டக்டர் அதை கண்டுகொள்ளாமல் டிக்கெட்போடுவதிலே குறியாக இருந்தார். பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றபோது நான்கு வாலிபர்கள் தாவி ஏறினார்கள். தலையை ஒரு சின்ன சீப்பால் சீவி மீண்டும் கலைத்துவிட்டுக்கொண்டார்கள். பஸ் புட்போர்டில் இரண்டுபேர் […]
நள்ளிரவு 12 மணி…அமாவாசை இருட்டு…மழை கொட்டிக்கொண்டிருந்தது.. ரோட்டில் தண்ணீர் பெருகி ஓடியது… ஆள் நடமாட்டமே இல்லை.டிப்டாப் உடை அணிந்த இளைஞன் கையில் சூட்கேசுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். மழை நீர் அவன் மேல் விழுந்து தெறித்தது.முகத்தில் வழிந்த மழை நீரையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவனது கால்கள் வேகமாக நடந்தன. கூர்க்கா விசில் அடித்தபடி அங்கு வந்தார். டிப்டாப் இளைஞன் மீது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. விசிலை ஊதிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு குடை பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். […]
பனி பிரதேசம்…கடுங்குளிர்…சாலையில் வளைந்து வளைந்து சென்றது அந்த பஸ். பல்வேறு மாநிலத்தவரும் பஸ்சில் வந்தனர். பெண்கள்,முதியவர்கள், குழந்தைகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் வந்தார்கள்.எல்லோரும் மலை பகுதியில் உள்ள அழகிய பூங்காவை கண்டு களிக்க சென்றனர்.குளிர்காற்று வீசியது.பனிக்குல்லாய் மாட்டியபடி பயணிகள் இருந்தனர்.தமிழ் நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு வாலிபர்கள் அந்த பஸ்சில் கடைசி சீட்டில் அமர்ந்தபடி ஜாலியாக பேசிகொண்டு இருந்தனர்,டிரைவர் பஸ்சை லாவகமாக ஓட்டிச்சென்றார். கண்டக்டர் அருகில் இருந்தார். மதியம் ஒரு மணி…பஸ்…வழியில் முக்கிய இடத்தில் நின்றது. […]
பிரபலமான நகைக்கடை… நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்…அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் நகை கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பனி அதிகமாக இருந்ததால் காவலாளி தலையில் பனிக்குல்லா மாட்டியபடி நகைகடை கட்டிடத்தை சுற்றி வந்தார்.பனிரெண்டு மணி ஆனதும் காவலாளி மீண்டும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் சேரில்வந்து அமர்ந்தார்.கண்களை தூக்கம் தழுவியது.அதிகாலை 5 மணிக்கு விழித்தவர் எழுந்து கடையை சுற்றிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. கடையின் பின்புறம் கட்டிடத்தில் ஓட்டை போடப்பட்டிருந்து. செங்கல் […]
அந்த கிராமத்தில் அந்த ஒரு பள்ளிக்கூடம் தான் உண்டு. அது அரசு பள்ளிக்கூடம்….5 ம்வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிப்பார்கள். ஆறாம் வகுப்புக்கு மேல் நகர பகுதிக்கு சென்று படிக்க வேண்டும்.அன்று விடுமுறை நாள். பள்ளி பூட்டிகிடந்தது. மாலை வேளை சோ என்று மழை கொட்டியது. பள்ளி அருகே ஒதுங்கினான் முனியன். காற்று பலமாக வீசியது. பள்ளிக்கு வெளியே ஒதுங்கியவன் மீது சாரல் அடித்தது. மழைவிடுவதாக தெரியவில்லை. பள்ளியின் உள்ளே போய்விடவேண்டியதுதான் என்று நினைத்தான். பூட்டை இழுத்து […]
சாம்பசிவம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.பை நிறைய சம்பளம் இல்லாவிட்டாலும் கை நிறைய சம்பளம்.அலுவலகத்துக்கும் அவரது வீட்டுக்கும் வெகு தூரம்.பஸ்சில் வந்துதான் அலுலகத்துக்கு நடந்து செல்வார்.திருமணம் ஆகாதவர்.இரண்டு தங்கச்சிகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.அப்பா இறந்து போனபிறகு அனைத்து செலவும் அவர் தலையில் வந்து விழுந்தது.தங்கச்சிகள் திருமணத்துக்காக பணத்தை சேர்க்கவேண்டியது இருந்ததால் செலவுகளை குறைத்து கொண்டார்.சிக்கனத்தின் வடிவமாக இருந்தார். அவரை கஞ்சன் என்று அனைவரும் கேலி பேசுவர். பிழைக்க தெரியாதவன் என்று திட்டுவர்.சம்பளத்தோடு […]
குழந்தை ரமேசுக்கு அன்று மூன்றாவது பிறந்த நாள்… கணேசனும் கனகாவும் தங்கள் மகனின் பிறந்தநாளை காலையில் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.உறவினர்கள் புடை சூழ ஹேப்பி பர்த்டே டூயூ என்று பாட்டுபாடி கேக் வெட்டினார்கள்.குழந்தை ரமேசுக்கு கோவிலுக்கு சென்று மொட்டை போட்டிருந்தார்கள் அவன்.தலையில்தொப்பி மாட்டியிருந்தார்கள். அவன் கேக் வெட்டுவது போல் படம் எடுக்க அவன் கையில் சின்ன கத்தியை கொடுத்து போஸ் கொடுக்க சொன்னார்கள்.அவன் கேக்கை எடுப்பதிலே குறியாக இருந்தான்.அங்கும் இங்கும் தலையை ஆட்டினான். கணேசன் தன்மகனின் கையைபிடித்துகத்தியால் […]
பரபரப்பாக காணப்பட்டது அந்த போலீஸ் நிலையம்.இரவு ஒன்பது மணி.வாலிபர் கனக சபையை போலீசார் அவர்களது பாணியில் விசாரித்து கொண்டிருந்தனர். அவன் உடலில் போலீசாரின் பிரம்பு விளையாடியது.ரத்தம் கொட்டியது. உண்மையை சொல் …நகையை எடுத்தது நீதானே…எங்கே வச்சிருக்கே சொல். என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.அவன் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அப்பாவி. என்னை விட்டுருங்க என்று கெஞ்சினான்.போலீசார் விடவில்லை.ஏய்…பொய் சொல்லாதே…அடிவாங்கி செத்து போவ..சொல்லு…உன் கூட்டாளி யாரு…அவன் எங்கே இருக்கான் சொல்லு என்று பல்வேறு வார்த்தைகளால் துளைத்தனர்.அவன் ..எனக்கும் எதுவும் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022