மர்ம சூட்கேஸ் …சிறுகதை

பரபரப்பாக காணப்பட்டது அந்த போலீஸ் நிலையம்.இரவு ஒன்பது மணி.
வாலிபர் கனக சபையை போலீசார் அவர்களது பாணியில் விசாரித்து கொண்டிருந்தனர். அவன் உடலில் போலீசாரின் பிரம்பு விளையாடியது.
ரத்தம் கொட்டியது. உண்மையை சொல் …நகையை எடுத்தது நீதானே…எங்கே வச்சிருக்கே சொல். என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.
அவன் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அப்பாவி. என்னை விட்டுருங்க என்று கெஞ்சினான்.போலீசார் விடவில்லை.
ஏய்…பொய் சொல்லாதே…அடிவாங்கி செத்து போவ..சொல்லு…உன் கூட்டாளி யாரு…அவன் எங்கே இருக்கான் சொல்லு என்று பல்வேறு வார்த்தைகளால் துளைத்தனர்.
அவன் ..எனக்கும் எதுவும் தெரியாது சார் என்றே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். ஆவேசமான இன்ஸ்பெக்டர்…ஓங்கி மிதிக்க முயன்ற போது டெலிபோன் ஒலித்தது.
பஸ்நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் சூட்கேசில் வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கு….சரியா பத்து மணிக்கு குண்டு வெடிக்கும் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.
இன்ஸ்பெக்டர் முகம் வியர்த்தது. சுற்றி நின்ற போலீசாரிடம்…..எல்லாம் பஸ் நிலையத்துக்கு போங்க…எவனோ ஒருத்தன் சூட்கேசில் குண்டு இருக்குன்னு போன் பண்ணுனாம்.
பத்து மணிக்கு வெடிக்குன்னு சொன்னான்…சீக்கிரம்….வெடி குண்டு நிபுணர்களுக்கு போன் பண்ணு…பஸ் நிலையத்தில். யாரும் இருக்க வேண்டாம்.. எல்லாரையும் விரட்டுங்க… என்று கத்தினார்.
கனகசபையை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீசார் அந்த பஸ்நிலையத்துக்கு விரைந்தனர். துப்பறியும் மோப்ப நாய் விரைந்து வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வேனில் வந்து இறங்கினார்கள்.
பஸ்நிலைய கடைகள். உடனடியாக அடைக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் நின்ற பஸ்கள் வெளியே அனுப்பப்பட்டன.
குண்டு வெடிக்க போகுது என்ற தகவல் பரவியதால் பஸ்நிலையத்தில் நின்றவர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்கள்.
பஸ்நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தை நோக்கி வெடிகுண்டு நிபுணர்கள் பாய்ந்து சென்றனர்.
சூட்கேஸ் இருக்கிறதா என்று தேடினார்கள். எந்த சூட்கேசையும் காணவில்லை. இரண்டாவது பிளாட்பாரமுன்னுதான சொன்னான். ஒருவேளை நம்மை திசைதிருப்புவதற்காக அப்படி சொன்னானா…என்று நினைத்த இன்ஸ்பெக்டருக்கு வியர்த்தது.
எல்லா பிளாட்பாரத்திலும் பாருங்க… என்று கத்தினார். அடுத்த பிளாட்பாரத்தை போலீசார் சோதனையிட்டனர். மோப்ப நாய்…பிளாட்பாரங்களில் வேகமாக ஓடியது.
வெடி குண்டு நிபுணர்கள்….அங்கும் இங்கும் சென்றபடி இருந்தனர். ஒவ்வொரு பிளாட்பாரமாக….சூட்கேசை தேடினார்கள். காணவில்லை. நேரம் பத்து மணியை நெருங்கி கொண்டிருந்தது…ம்…இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கு…நல்லா பாருங்க…என்று இன்ஸ்பெக்டர் கத்தினார். அனைவரும் பரபரப்புடன் நாலா பக்கமும் தேடினார்கள்.
மணி பத்தாக ஒரு நிமிடம்தான் இருந்தது. அனைவர் மனதும் பக் பக் என்று அடித்து கொண்டது. எந்த சூட்கேசும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மனநலம் பாதிக்ககப்பட்ட வாலிபர் ஒருவர் கையில் சூட்கேசுடன் அங்கு நடந்து வந்தான். ஆ..சூட்கேஸ்…ஆ..சூட்கேஸ்…என்று போலீசாரிடம் காட்டினான். ஏய்..சூட்கேசை அங்கே போடு…அதிலே குண்டு இருக்கு…அதை தூர போடுறா என்று இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டார்.
அவனுக்கு அது புரியவில்லை. நான் போடமாட்டேன்.. என் சூட்கேஸ்… நான் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். போலீசார் அவனை நெருங்கினார்கள்.அவன் சூட்கேசுடன் ஓடமுயன்றான்.
சரியாக மணி பத்து.அந்த சூட்கேசில் இருந்த குண்டு வெடித்தது. அந்ந மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார். சூட்கேஸ் சிதைந்து கிடந்தது. எங்கும் புகை….
பஸ்நிலையத்தில் வெடி சூட்கேசில் வெடிகுண்டு வைத்தது யார்…அந்த சூட்கேசை தூக்கிச்சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் யார் என்று தீவிர சிந்தனையில் இருந்தார்.
பஸ் நிலைய கண்காணிப்பு காமிராவை கண்காணித்த போது ஒரு பெண் சூட்கேசை வைத்துவிட்டு ஒருவாலிபருடன் பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது…
அந்த பெண் வைத்துவிட்டு சென்ற சூட்கேசை மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிக்கொண்டு பஸ் நிலையத்திற்கு வெளியே சென்றதும் தெரிந்தது. ம்…மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்….யார்…எந்த ஊர்… இவன் எதனால் மனநலம் பாதிக்கப்பட்டான் என்ற யோசனையும் அவர் மனதில் ஓடியது .
காலை பத்திரிகையில் குண்டு வெடிப்பு செய்தி பெரிய அளவில் பிரசுரமாகியது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரின் படமும் வெளியாகி இருந்தது.
அதை பார்த்த அந்த வாலிபரின் பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்கள்…ஏண்டா மவனே உன்னை எங்கெல்லாம்…தேடினோம்… நம்ம ஊரு பஸ்நிலையத்திலே காணாமல் போன ஒரு பணக்காரருடைய சூட்கேசை நீ எடுத்துட்டு போயிட்டதாக நீ வைத்திருந்த சூட்கேசுடன் பிடித்த சென்ற போலீசார் உன்னை அடிச்சாங்க. பின்னர் பணக்காரர் சூட்கேஸ் வேறு ஒரு இடத்தில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன்பிறகு போலீசார் உன்னை வீட்டுக்கு அனுப்புனாங்க…அப்புறம்..அவன் அது என் சூட்கேஸ். அது என் சூட்கேஸ் என்றுபுலம்பி கொண்டிருந்தான்.
திடிரென்று வீட்டை விட்டு வெளியே போனவன் வரவே இல்லை. அவன் சூட்கேசை போலீசார் அன்னைக்கு கொடுத்திருந்தா அவன் இப்படி ஆயிருக்க மாட்டான். அப்பாவியா இருந்தது அவன் தப்பா..என்று அந்த வாலிபரின் தாய் கதறிக்கொண்டிருந்தார்.
என் மகன் பிழைச்சுக்கிடுவானா..டாக்டர்…என் மகனை காப்பாத்துங்க டாக்டர் என்று அந்த வாலிபரின் தந்தை டாக்டரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.
அதை கேட்ட இன்ஸ்பெக்டரின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் துளிர்த்தது.
அரசு ஆஸ்பத்திரி டீனை சந்தித்து அந்த வாலிபருக்கு உயரிய சிகிச்சை அளித்து அவனை காப்பாத்தும்படி கூறினார். டீனும்..அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினார். இன்ஸ்பெக்டர் உள்ளத்தில் கருணை கசிய தொடங்கியது.
போலீஸ் நிலையத்தில் அடிவாங்கிய கனகசபை அவர் கண்முன் வந்து போனான்.மீண்டும் ஒரு வாலிபர் மனநிலை பாதிக்க கூடாது என்று நினைத்தவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
கனகசபை நடக்க முடியாமல் தள்ளாடியபடி அய்யா நான் எந்த தப்பும் பண்ணலய்யா என்றான். நீ தப்பு பண்ணல….சாப்பிட்டியா என்று கேட்டார்.இல்லைய்யா என்றான் கனகசபை.
போலீசாரை அழைத்து அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க சொன்னார் .இனி இந்த பைபனை அடியாதீங்க…ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போங்க…சிகிச்சை முடிந்ததும் விட்டுவிடலாம்..தப்பு செய்றவங்க எங்கோ இருக்காங்க…அப்பாவியை அடிச்சிபுடுறோம்..என்னசெய்ய..நமக்கு பிரஷர் என்று கண்கலங்கினார்.
போலீசார் பதட்டத்துடன் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெருங்கி சென்றார். சீக்கிரம் அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க…என்று போலீசாரை அவசரப்படுத்தினார்.
அவர்கள் அவனை தூக்கி வேனில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சிதறிக்கிடந்த வெடிக்குண்டு துகள்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சொல்வதை போலீசார் ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தனர் .ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் உடல் நலம் தேறிவருவதாகவும் விரைவில் அவனது பைத்தியமும் தெளிந்துவிடும் என்று டீன் சொன்னதை கேட்ட இன்ஸ்பெக்டர் மனம் குளிர்ந்தது.
அடுத்த நாள் இன்ஸ்பெக்டரின் ராஜினாமா கடிதம் போலீஸ் சூப்பிரண்டு மேஜையில் இருந்தது.
பணம், பதவி, செல்வாக்கு, அதிகாரம், இருந்தும் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மனைவியுடன் ராமேசுவரத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
வே.தபசுக்குமார்.தூத்துக்குடி
