• June 6, 2025

பாகுபாடு இன்றி 1௦௦ நாள் வேலை: இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

 பாகுபாடு இன்றி 1௦௦ நாள் வேலை: இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கிளை செயலாளர் இன்னாசி முத்து தலைமை தாங்கினார்.
தாலுகா செயலாளர் பாபு, உதவி செயலாளர் ராமகிருஷ்ணன் ,மாவட்ட குழு பரமராஜ், சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*100 நாள் வேலைத்திட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாகுபாடு இன்றி வேலை வழங்கவேண்டும்.

  • இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.
    *பெரியகுளம் கண்மாய் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றுக.
    *இளையரசனேந்தல்- கொடப்பாறை செல்லும் சாலை மற்றும் கொடப்பாறை கிழக்கு பாதையை உடனே செப்பனிட வேண்டும்.
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *