கோவில்பட்டி கல்லூரியில் பேராசிரியர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி உள்தர மதிப்பீட்டுக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக பேராசிரியர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஒரு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
உள்தர மதிப்பீட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறை இணைப்பேராசிரியருமான ஆர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனரும், தாவரவியல் துறைத்தலைவருமான பா. மகேஷ்குமார் வாழ்த்தி பேசினார்.

கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியரும், துணை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலருமான சுகந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியின் மருத்துவ தாவரவியல் துறையின் உதவிப்பேராசிரியர் எ.ராஜேஷ் ; இந்திய அறிவு அமைப்பில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறையின் பயன்கள் குறித்து முதல் அமர்வில் எடுத்துரைத்தார்.
உணவே மருந்து என்றும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் குறித்தும் எடுத்துரைத்தார். பின்னர் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் சவால்கள் குறித்து இரண்டாவது அமர்வில் சி உரையாற்றினார்.
மூன்றாவது அமர்விற்கான சிறப்பு விருந்தினரை இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் கி ரேணுகாதேவி அறிமுகம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இந்திய தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள ‘பிஎன்டி’ பிரிவின் மூத்த முதன்மை விஞ்ஞானி என். விஜயன் “அரசு நிதியுதவிக்காக ஆய்வு முன்மொழிவை சமர்ப்பிக்கும் முறை” என்ற தலைப்பில் சமூக வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் அரசு உதவியுடன் ஆராய்ச்சி செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

முடிவில் உள் தர மதிப்பீட்டுக்கழக உதவி ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறைத் தலைவருமான இரா.சரவண செல்வக்குமார் நன்றி கூறினார்.







