நெல்லை பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவரது மனைவி ஜூலியட். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தங்கள் மகன் வீட்டிற்கு செல்வதற்காக இரவில் நெல்லையிலிருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாக கங்கைகொண்டான் சுங்கச்சாவடியை கடந்து கரிசல்குளம் விலக்கு அருகே உணவகத்தில் பயணிகள் சாப்பிடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை நிறுத்தியுள்ளார். பஸ்சில் இருந்த பெரும்பான்மையான பயணிகள் கீழே இறங்கி உணவகத்திற்குச் சென்றனர். ஜஸ்டின், ஜூலியட் தம்பதியும் தங்களது உடைமைகளை பஸ்சிலேயே […]
கோவில்பட்டியில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார முறைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட உணவு பொருள் கண்காணிப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வெளிநாட்டு தரத்தில் தயாரிக்கும் பிரபல சிக்கன் பர்கர், பீட்சா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனமான மீட் அண்ட் ஈட் உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனையிட்ட போது […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 11-ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். யோகாசன போட்டி தொட க்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார். தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென்மண்டல அளவிலான பெண்கள் CBSE பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டு அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு லீக் முறையில் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்களை தீர்மானிக்கப்படும் இந்த போட்டியில் மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று 29 8 2026 இரண்டாவது நாள் போட்டியில் கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 17 […]
உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கு கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அதிரடி உத்தரவு
கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள தனியார் உரக்கடை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் பேசியதாவது: – உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், அன்றைய தினத்திற்கான உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை கடையின் வெளிப்புறத்தில் அல்லது விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டும். […]
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 626 ஆக உயர்ந்து உள்ளது. 2,500 பேரை காணவில்லை. தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 57 பேரில் இதுவரை 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் இரவு சென்னை வருவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, […]
நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற் பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது.போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்ச ரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது.சுனாமி அலைகளையே மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், […]
கோவில்பட்டியில் நாய், மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளன.ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதே போல் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது. எனவே நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க. தமிழரசன் […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான பெண்கள் ஆக்கி போட்டி இன்று 28ந் தேதி தொடங்கியது. 30 8 2026 வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்திலும் போட்டிகள் நடக்கின்றன. இன்று காலை 10 மணி அளவில் நடந்த துவக்க விழாவில் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் ஆகஸ்டு மாதத்திற்கான பராமரிப்பு பணிகள் 29-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 29 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், […]







