மாநில யோகாசன போட்டி;கயத்தாறு, விஜயகரிசல்குளம் பள்ளிகள் சாம்பியன்
Oplus_16908288

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 11-ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் நடந்தது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
யோகாசன போட்டி தொட க்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார். தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் ரவீந்திரன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர், ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், செயலாளர் சூரிய நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இப்போட்டியில், வகுப்பு வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஒட்டு மொத்தமாக சாம்பியன் பட்டம் பெற்ற பள்ளி அணியினருக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் விஜயகரிசல்குளம் மகாத்மா காந்தி நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் கயத்தாறு மதர் தெரசா மெட்ரிக் பள்ளி ஆகிய 2 அணிகள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர்கள் திலகரத்தினம், சிவகணேஷ் குமார்,, சதீஷ், ஆசிரியர் அந்தோணி ராஜ், டிரஸ்ட் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பொருளாளர் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினார்







