திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (02.07.2026) காலை, ஈரோடு தெற்கு மாவட்ட மதிமுக வினர் பலர் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மு.கோபால் , தலைமையில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு முன்னாள் உறுப்பினர் பி.வி.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இணையதள அமைப்பாளர் கபிலன் கணேசமூர்த்தி, மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் எஸ்.நல்லசிவம், மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னாள் […]
தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மற்றும் அரசியல் உத்திகள் தமிழக அரசியல் கட்சிகளிடையே தீவிரமாக எழுந்துள்ளன. இந்நிலையில், திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நடைபெற உள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதிமுக நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை. மாறாக, இத்தேர்தலில் தவெக […]
கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (32) என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி முருகன் மகன் செலிஸ்டின் குமார் (38), அவரது சகோதரர் மனோ என்ற மனோகுமார் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் […]
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27), பிரவீன் (25), ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த தனராஜ் (30), நேதாஜி நகரை சேர்ந்த ஆனந்த் (28), சாத்தூர் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (28) மற்றும் சையத் அப்ரலி (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையின்போது 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]
கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர்கள் நிதியுதவியுடன் மத்திய ,மாநில அரசுப்பணி தேர்வு இலவச
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நூலகம் மற்றும் வேலைவாய்ப்பு கழகம் இணைந்து முன்னாள் மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி தலைமையேற்றார். நூலகர் முனைவர் சு.பாலா வரவேற்புரையாற்றினார். சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் தொடக்கவுரை ஆற்றினார். துளிர் IAS அகடெமி நிறுவனர் சி.மாரிமுத்து மற்றும் இணை நிறுவனர் சி.காளிதாஸ் அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் இக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, […]
நாட்டின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்காக அயராது உழைக்கும் மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையை கௌரவிக்க தேசிய மருத்துவர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த தேசிய மருத்துவர்கள் தின விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் வழங்குதல்,மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள்நடுதல்,மூத்த மருத்துவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்குதல்,நலமுடன் வாழ 10 கட்டளைகள் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடுதல், […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்திற்கு மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில், சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்திருந்தோம். காவல்துறை தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. எனவே தோழர்கள் அனைவரும் 1-7-2026- காலை 10 மணிக்கு ESI அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் , பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் […]
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் (IMA), கோவில்பட்டி கிளை சார்பில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் – ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் மராத்தான்–வாக்கத்தான் நடைபெற்றது. இன்று ஜூலை 2 ஆர்த்தி மஹாலில் இருந்து தொடங்கிய மரத்தானை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, நகர்மன்றத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ்,, காவல்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவில்பட்டி நகர செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் […]







