தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்ணகிரியை சேர்ந்தவர் தமிழகன்(வயது 57) இன்று காலை வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார்.அப்போது, அங்கு மறைந்திருந்து அவரது மகன் காசிராஜன்(36) தந்தையை அரிவாளால் வெட்ட முற்பட்டபோது தந்தை தமிழழகன் அரிவாளை பறித்து மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்தார்மேலும், தமிழழகனுக்கு பாதுகாப்பிற்காக உடன் வந்த அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் சகோதரர் மகன் காசிதுரை ஆகிய இருவரும் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
தூத்துக்குடியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்படுகின்றன,அதேபோல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தெற்கிலிருந்து வரும் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்துதான் மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்கின்றன.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலிருந்து வந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்கள், புதிய பஸ் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம ஊராட்சி தலைவர் பதவி மற்றும் 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமான வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் (Cyber Supporting Officer) அடங்கிய குழுவினரை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்களிலேயே சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்களை பெறுவது குறித்தும், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எல். பாலாஜி சரவணன் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.போதைப்பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகளுக்கு […]
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 950 கி.மீ நீள கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டுதோறும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தடைவிதித்து வருகிறது.நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் ஏப்ரல் 14ம்தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காலம் முடிவடைந்த நிலையில் நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுழற்சி முறையில் 130 விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். இரவு 9 […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு […]
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த நம்பி (வயது 49). இவர் ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக்கொண்டு ரூ. 2,50,000- ஐ வட்டிக்கு கடனாக கொடுத்து இருக்கிறார். பின்னர் அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததார்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரித்து கடந்த 9.6.2022 அன்று நம்பியை கைது செய்தனர். பின்னர் […]
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் பொது தேர்வு முடிந்து மே மாதம் கோடை விடுமுறை விடுவதும், ஜூன் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதும் வழக்கம்.கொரோனா பிரச்சினை காரணமாக இவ்வாண்டு மே மாதம் வரையில் பள்ளிகள் திறந்திருந்தது. இறுதி தேர்வும் நடந்தது. அதனால் ஜூன் மாதம் முதலிலேயே திறக்க வேண்டிய பள்ளிகள் நாளை மறுநாள் 13ம் தேதி (திங்கட்கிழமை) திறக்க இருக்கிறது. இந்தநிலையில் பள்ளி கட்டிடங்கள், குடிதண்ணீர், கழிவறை வசதிகள், மற்றும் வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







