• June 7, 2025

தூத்துக்குடி நீதிமன்றம் அருகே மகனை வெட்டிக்கொன்ற தந்தை

 தூத்துக்குடி நீதிமன்றம்  அருகே மகனை வெட்டிக்கொன்ற தந்தை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்ணகிரியை சேர்ந்தவர் தமிழகன்(வயது 57) இன்று காலை வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்து அவரது மகன் காசிராஜன்(36) தந்தையை அரிவாளால் வெட்ட முற்பட்டபோது தந்தை தமிழழகன் அரிவாளை பறித்து மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்தார்
மேலும், தமிழழகனுக்கு பாதுகாப்பிற்காக உடன் வந்த அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் சகோதரர் மகன் காசிதுரை ஆகிய இருவரும் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்றம் அருகே நடந்த இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *