நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க போலீசார் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஆய்வுக்கூட்டத்திற்கு குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் III நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் கண்ணன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் வசந்த், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் அசோக், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன்ராயன், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ராஜமோகன்,
வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, கோவில்பட்டி மருத்துவமனை உறைவிட மருத்துவர் பூவேஷ்வரி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ,காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், விளாத்திக்குளம் பிரகாஷ், சாத்தான்குளம் அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளா தேவி உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
