விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் கட்சிக்குள் தந்தை- மகன் இருவரிடையே கோஷ்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசியல் […]
கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவை முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர கருணாநிதியை சந்தித்து வழங்கினர். இந்த குழுவில் சாகித்ய பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் கா.உதயசங்கர், நகர் மன்ற உறுப்பினர் ஜோதிபாசு […]
தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை, தூத்துக்குடி, தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கேரளாவில் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார முழு நேர கிளை நூலகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாமின் நிறைவு விழா நூலக வளாகத்தில் நடந்தது. முகாம் நிகழ்ச்சியில் சிறுவர்-சிறுமிகளுக்கான இசை நாற்காலி, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், சிலம்பாட்டம், கதை சொல்லுதல், திருக்குறள் ஒப்புவித்தல் பலூன் உடைத்தல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நூலகர் மகாராஜன் வரவேற்புரை வழங்கினார் நூலகர் அம்பிகா கலந்துகொண்டார். சிறப்புவிருந்தினர்களாக எழுத்தாளர் க.உதயசங்கர், ஆசிரியை […]
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ‘அவர்கள், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு முறையாக நிதி விடுவிக்க வேண்டும். இத்திட்டத்தில் […]
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல, சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் […]
கோவில்பட்டி நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் கழுகுமலை, கயத்தார், புதூர், கடலையூர், விளாத்திகுளம் ஆகிய கிராம ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கு சமுதாய நாய்களை பிடித்தலுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர்.க.கருணாநிதி உத்திரவின் பேரில் மற்றும் நகராட்சி ஆணையாளர்.கமலா வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. விலங்குகள் நல வாரிய உதவி இயக்குநர்கள் மருத்துவர்.விஜயஸ்ரீ, கால்நடை மருத்துவர்.வி.சுப்பிரமணியன் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் மற்றும் நகர்நல அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் ஆ.இளங்கோ, துப்புரவு ஆய்வாளர் […]
தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். * தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.* தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்* குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2024_2025 ம் ஆண்டு மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ 6.80 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய் ஆழப்படுத்துதல் பணி நடக்கிறது. இந்த பணியை சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ, தொடக்கி வைத்தார். மேலும் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் தானியக்கிடங்கு கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கோவில்பட்டி வட்டார வளர்ச்சி […]
சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரன் மீது மனித உரிமைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி. […]