• June 8, 2025
கோவில்பட்டி

அகில இந்திய ஆக்கிபோட்டி: செகந்திராபாத் அணி அபார வெற்றி; சென்னை அணியினர் `கோல்’

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று 24ம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதின. ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் லவ்ப்ரீத் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 29-வது நிமிடத்தில் அதே […]

கோவில்பட்டி

அகில இந்திய ஆக்கி: சென்னையை வீழ்த்திய கோவில்பட்டி- சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்ற

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய  ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. விழாவிற்கு முன்னாள் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் […]

பொது தகவல்கள்

வெப்பநிலை மானியை கண்டுபிடித்த பாரன்ஹீட் பிறந்த தினம் இன்று…(மே 24)

108 டிகிரி வெயில் கொளுத்தியது என்று செய்தி வருகிறது. 100 டிகிரி ஜுரம் என்று பேசிக்கொள்கிறார்கள். வெப்பநிலை இப்படி பலவாறாக அதிகம் அளவிடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில், மனிதர்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் வெப்பத்தை அறிந்திருந்தனர். பனிக்கட்டி குளிர்ச்சியாக இருக்கிறது. நெருப்பு சூடாக இருக்கிறது என்பது தெரியக்கூடியது தான். வெப்பத்தின் சிக்கலான தன்மைகளை அறிவதற்கும், வெப்ப நிலையை துல்லியமாக அளவிடுவதற்கும் வெகுகாலம் பிடித்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தண்ணீர் கொதிக்கும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இரும்பு உருகும். இப்படி வெப்பத்தின் […]

கோவில்பட்டி

சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில ஆக்கி: தூத்துக்குடி அணி 4-வது இடம்

வேலூரில் சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்றது இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி கலந்து கொண்டு விளையாடியது. போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.  மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்ட இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி முதல் லீக் சுற்று போட்டியில் எச் பிரிவில் முதலிடம் பெற்று நாக்அவுட் சுற்றான கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சென்னை அணியை 2-0 என்று […]

செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு; ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலம், அதற்குப் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த காரணத்தால், அதை மீண்டும் தங்களுக்கே வழங்க கோரி லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததை தொடர்ந்து சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் செயலாளரான  ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அன்சுல் […]

செய்திகள்

மோசமான வானிலையால் ஆபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்: உதவாத பாகிஸ்தானின் பிடிவாதம்  

கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு  227 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலையில் சிக்கியது. இதில், விமானத்தின் முகப்பு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 227 பயணிகள் உயிர்தப்பினர். மோசமான வானிலை காரணமாக, ஆபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, வழக்கமான பாதையிலேயே, மோசமான வானிலையை எதிர்கொண்டு, விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் எப்படி மீண்டது என்பது குறித்து விமானப் […]

கோவில்பட்டி

எம் சாண்ட், ஜல்லி,உடை கல்  விலை உயர்வை கட்டுப்படுத்தகோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள்

கோவில்பட்டி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூடப்பன்,செயலாளார் காளிராஜ், பொருளாளர் பிரபு என்ற கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் முத்துராமன் ,துணை செயலாளர் பாரதி ரவிக்குமார்,துணை பொருளாளர் செந்தில்குமார் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர்  மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:- கடந்த 15-ம் தேதி முதல் கிரிஷர் மற்றும் குவாரிகளில் எம் சாண்ட் மணல் டன்னுக்கு […]

செய்திகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்; குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு

போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு  வேறு நீதிபதியின் விசாரணைக்கு  மாற்றப்பட்டுள்ளது. இதனால்,  இன்று நடைபெற இருந்த குற்றச்சாட்டு பதிவு தள்ளி வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை  அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் […]

செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற பெண் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1,000 அபராதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி  காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி புத்தன்சந்தை, மேல்புறம், கழுவன்திட்டை வழியாக குழித்துறைக்கு சென்றது.. பேரணியில் தாரகை கத்பா்ட் எம்.எல்.ஏ. பங்கேற்று ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி சென்றார். குழித்துறை பகுதியில் பேரணி வந்தபோது போக்குவரத்து கண்காணிப்பில் […]

செய்திகள்

கொரோனா பாதிப்பு :தமிழகத்தில் முக கவசம் கட்டாயமா? சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா பாதிப்பு, 2019ம் ஆண்டு இறுதி முதல், 2023ம் ஆண்டு வரை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், தீவிர பாதிப்பாக இதுவரை மாறவில்லை. தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று […]