தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27), பிரவீன் (25), ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த தனராஜ் (30), நேதாஜி நகரை சேர்ந்த ஆனந்த் (28), சாத்தூர் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (28) மற்றும் சையத் அப்ரலி (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையின்போது 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]
கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர்கள் நிதியுதவியுடன் மத்திய ,மாநில அரசுப்பணி தேர்வு இலவச
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நூலகம் மற்றும் வேலைவாய்ப்பு கழகம் இணைந்து முன்னாள் மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி தலைமையேற்றார். நூலகர் முனைவர் சு.பாலா வரவேற்புரையாற்றினார். சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் தொடக்கவுரை ஆற்றினார். துளிர் IAS அகடெமி நிறுவனர் சி.மாரிமுத்து மற்றும் இணை நிறுவனர் சி.காளிதாஸ் அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் இக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, […]
நாட்டின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்காக அயராது உழைக்கும் மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையை கௌரவிக்க தேசிய மருத்துவர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த தேசிய மருத்துவர்கள் தின விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் வழங்குதல்,மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள்நடுதல்,மூத்த மருத்துவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்குதல்,நலமுடன் வாழ 10 கட்டளைகள் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடுதல், […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்திற்கு மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில், சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்திருந்தோம். காவல்துறை தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. எனவே தோழர்கள் அனைவரும் 1-7-2026- காலை 10 மணிக்கு ESI அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் , பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் […]
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் (IMA), கோவில்பட்டி கிளை சார்பில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் – ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் மராத்தான்–வாக்கத்தான் நடைபெற்றது. இன்று ஜூலை 2 ஆர்த்தி மஹாலில் இருந்து தொடங்கிய மரத்தானை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, நகர்மன்றத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ்,, காவல்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவில்பட்டி நகர செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் […]
இந்திய ஜூனியர் ஆக்கி அணி ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி வீரர்களை இன்று ஆக்கி இந்தியா அறிவித்தது . இதில் தமிழக வீரரும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியின் வீரருமான மணிமாறன் தேர்வாகி இந்திய அணிக்காக விளையாட உள்ளார். தேர்வு பெற்ற மணிமாறனை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், செயலாளர் செந்தில் […]
கோவில்பட்டி, எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய மேலாளர் ஜி. மலையாண்டி மேற்பார்வையில் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தீ விபத்துகள் ஏற்படக் காரணமான சூழ்நிலைகள், அவற்றைத் தடுக்கும் முறைகள், அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் 101, 112 ஆகிய அவசர உதவி எண்களின் […]
1908 ஜூன் 30-ல் சைபீரியாவில் நிகழ்ந்த துங்குஸ்கா விண்கல் வீழ்ந்த தினத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஜுன் 30ம் தேதி சர்வதேச விண்கற்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பூமிக்கு விண்கற்களால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். அதன்படி இன்று (ஜூன் 30) தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச விண்கற்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ […]
சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் ரோட்டை சேர்ந்தவர் கனகராஜ் (73). இவர் தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, சபையின் ஊழியரான குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த டைட்டஸ் (41) என்பவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதை கனகராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, டைட்டஸ் மற்றும் உதவி போதகர் ஜான் தாமஸ் (57) ஆகியோர் கனகராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதன்படி, கடந்த 4.10.2016 […]







