தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கு 36,100 பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 – 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் செப்., 12ல் தொடங்கியது.
நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் முடிந்தது
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் உட்பட, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை, இன்று தொடங்குகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.







