கொலை வழக்கில் கைதானவர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார்,’

இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி எதிரியை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.








