முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி: கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளிக்கு வெண்கல பதக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்டம் நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி அளவிலான மகளிர் கபடி போட்டியில் கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளி வெண்கலப் பதக்கம் பெற்றது, வெற்றி பெற்ற பள்ளி வீராங்கனைகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்







